வாழ்க்கை நொடியில் மாறலாம்-துபாய் லாட்டரியில் ரூ.33 கோடி பரிசு பெற்ற இந்திய ஏழை..

FB IMG 1671967457256 - 2026

துபாய் ஆன்லைன் லாட்டரியில் நகைக்கடையில் பணிபுரியும் இந்தியாவை சேர்ந்த டிரைவர் ஒருவருக்கு ரூ.33 கோடி ஜாக்பாட் பரிசாக கிடைத்துள்ளது.

வாழ்க்கை அடுத்த நொடியில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதற்கு உதாரணமாக இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த அஜய் ஓகுலா (31) என்பவருக்கு லாட்டரியில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.4 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மேய்ச்சல் நிலங்களை பராமரிக்கும் பணிக்காக சென்றவர். தற்போது அங்குள்ள நகைக்கடை நிறுவனத்தில் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.மாதந்தோறும் 3,200 திர்ஹாம் (அதாவது இந்திய மதிப்பில் ரூ.71,968) சம்பளமாக பெற்று வருகிறார்.இந்நிலையில், சமீபத்தில் நடந்த கிராண்ட் எமிரேட்ஸ் குலுக்கலில், அவருக்கு முதல் பரிசான 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக கிடைத்துள்ளது.

லாட்டரியில் ஜாக்பாட் அடித்தது குறித்து அஜய் ஓகுலா கூறுகையில்,”நான் ஜாக்பாட் அடித்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. வழக்கமாக என்னுடைய முதலாளியிடம் லாட்டரியில் பணம் கிடைத்தால் எப்படியெல்லாம் வாழ்க்கை மாறும் என்பது குறித்து பேசுவேன். அதற்கு, அவர் தேவையில்லாமல் செலவிடும் பணத்தை அதில் முயற்சி செய்து பார்க்கலாமே என கூறினார்.

இதனையடுத்தே, எமிரேட்ஸ் டிரா மொபைல் செயலியை டவுன்லோடு செய்து 2 டிக்கெட் வாங்கினேன். லாட்டரியில் வென்றதாக இ-மெயில் வந்தபோது சிறிய தொகை என எண்ணியிருந்தேன்.அதன் மதிப்பை அறிந்த போது, உறைந்து போய்விட்டேன். வார்த்தையே வரவில்லை.

இந்தத் தொகையைக் கொண்டு சொந்தமாக கட்டுமான நிறுவனம் துவங்க உள்ளேன். மேலும் ஒரு அறக்கட்டளையை உருவாக்க உள்ளேன்.எனது கிராமத்தை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள பலருக்கு அடிப்படைத் தேவைகளை பெற உதவும். ஜாக்பாட் அடித்ததை எனது அம்மாவும், உடன்பிறந்தவர்களும் நம்பவே இல்லை. இப்போது நான் செய்திகளில் வருவதால் அவர்கள் நிச்சயம் நம்புவார்கள்.’ அவர் கூறியுள்ளார்.இதே குலுக்கலில், அஜய் ஓகுலாவுக்கு அடுத்ததாக 50 வயதான பிரிட்டனை சேர்ந்த பவுலா லீச் என்பவர், 77,777 பில்லியன் திர்ஹாமை வென்றார். 3 குழந்தைகளின் தாயான இவர், சுமார் 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மனித வள நிபுணராக பணியாற்றி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories