வாழ்க்கை நொடியில் மாறலாம்-துபாய் லாட்டரியில் ரூ.33 கோடி பரிசு பெற்ற இந்திய ஏழை..

FB IMG 1671967457256 - 2026

துபாய் ஆன்லைன் லாட்டரியில் நகைக்கடையில் பணிபுரியும் இந்தியாவை சேர்ந்த டிரைவர் ஒருவருக்கு ரூ.33 கோடி ஜாக்பாட் பரிசாக கிடைத்துள்ளது.

வாழ்க்கை அடுத்த நொடியில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதற்கு உதாரணமாக இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த அஜய் ஓகுலா (31) என்பவருக்கு லாட்டரியில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.4 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மேய்ச்சல் நிலங்களை பராமரிக்கும் பணிக்காக சென்றவர். தற்போது அங்குள்ள நகைக்கடை நிறுவனத்தில் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.மாதந்தோறும் 3,200 திர்ஹாம் (அதாவது இந்திய மதிப்பில் ரூ.71,968) சம்பளமாக பெற்று வருகிறார்.இந்நிலையில், சமீபத்தில் நடந்த கிராண்ட் எமிரேட்ஸ் குலுக்கலில், அவருக்கு முதல் பரிசான 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக கிடைத்துள்ளது.

லாட்டரியில் ஜாக்பாட் அடித்தது குறித்து அஜய் ஓகுலா கூறுகையில்,”நான் ஜாக்பாட் அடித்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. வழக்கமாக என்னுடைய முதலாளியிடம் லாட்டரியில் பணம் கிடைத்தால் எப்படியெல்லாம் வாழ்க்கை மாறும் என்பது குறித்து பேசுவேன். அதற்கு, அவர் தேவையில்லாமல் செலவிடும் பணத்தை அதில் முயற்சி செய்து பார்க்கலாமே என கூறினார்.

இதனையடுத்தே, எமிரேட்ஸ் டிரா மொபைல் செயலியை டவுன்லோடு செய்து 2 டிக்கெட் வாங்கினேன். லாட்டரியில் வென்றதாக இ-மெயில் வந்தபோது சிறிய தொகை என எண்ணியிருந்தேன்.அதன் மதிப்பை அறிந்த போது, உறைந்து போய்விட்டேன். வார்த்தையே வரவில்லை.

இந்தத் தொகையைக் கொண்டு சொந்தமாக கட்டுமான நிறுவனம் துவங்க உள்ளேன். மேலும் ஒரு அறக்கட்டளையை உருவாக்க உள்ளேன்.எனது கிராமத்தை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள பலருக்கு அடிப்படைத் தேவைகளை பெற உதவும். ஜாக்பாட் அடித்ததை எனது அம்மாவும், உடன்பிறந்தவர்களும் நம்பவே இல்லை. இப்போது நான் செய்திகளில் வருவதால் அவர்கள் நிச்சயம் நம்புவார்கள்.’ அவர் கூறியுள்ளார்.இதே குலுக்கலில், அஜய் ஓகுலாவுக்கு அடுத்ததாக 50 வயதான பிரிட்டனை சேர்ந்த பவுலா லீச் என்பவர், 77,777 பில்லியன் திர்ஹாமை வென்றார். 3 குழந்தைகளின் தாயான இவர், சுமார் 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மனித வள நிபுணராக பணியாற்றி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories