நான் உயிரோட இருக்கேனா? என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க: நித்யானந்தா!

nithyananda in kailasha - 2026

நான் உயிரோட இருக்கேனா? என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க என்று, நித்யானந்தா சமூக வலைத்தளத்தில் கேலி கிண்டல் கலந்த தொனியில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஹிந்துக்களுக்காக தனி நாடு உருவாக்குவேன் என்ற கொள்கையுடன் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி, அங்கே குடியேற விண்ணப்பிக்கலாம் என சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நித்யானந்தா. தொடர்ந்து கைலாசா நாட்டுக்கு என தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தி, கைலாசா நாட்டுக்கான சர்வதேச தூதர்களையும் அறிவித்து அதிரடி காட்டினார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நித்யானந்தா ஹிந்து மதத்துக்காக உயிரை விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.இது தொடர்பாக நித்யானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேசஸ்வரன் வீடியோ கான்பரசிங் மூலம் உரையாற்றினார். அப்போது இந்து தர்மத்தை காப்பதற்காக நித்யானந்தா உயிர் தியாகம் சமாதி அடைந்து விட்டதாக அறிவித்தார். இது நித்யானந்தாவின் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நித்யானந்தா நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளார், நித்யானந்தா இறந்துவிட்டதாக பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன என்று கைலாசா முகநூல் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை அடுத்து, யூடியூப் நேரலையில் பேசிய நித்யானந்தா, தன்னைக் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

யூடியூப் நேரலையில் நித்யானந்தா பேசியவை: இன்று, ஏப்ரல் 3, வியாழக்கிழமை இந்திய நேரப்படி 4.39 மணிப்படி நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக இந்து சாஸ்திரங்களுதான் உலகின் முதல் ஆன்மிக AI செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தேன். அதனால் நேரலையில் வருவதை குறைத்து கொண்டேன்.

பலபேர் கைலாசாவை கட்டுப்படுத்த நினைத்தாலும் அவர்கள் நினைக்கும் போக்கிலே கைலாசாவை நடத்த நினைத்தாலும் அது நடக்காமல் போவதால் அவர்களுக்கு ஏற்படும் கோபம், அவர்கள் நடத்தும் தாக்குதல்களை நான் அறிவேன். ஆனாலும் அண்ணாமலையார் (இறைவன்) சொல்வதைத்தான் செய்வேன்”

மற்ற நாடுகளின் உள்நாட்டு பிரச்னைகள் பற்றி கேள்வி கேட்பார்கள் என்பதால் மட்டுமே நேரலையில் பேட்டி கொடுப்பதை தவிர்க்கிறேன். கைலாசா பற்றியும் என்னை பற்றியும் கேட்டால் எப்போதும் பதில் தர காத்திருக்கிறேன்” – என்று தெரிவித்தார்.

மேலும், இது தான் நேரலையில் தான் பேசுகிறேன் என காட்டுவதற்கு Youtube Live கமென்ட் ஒன்றை நித்யானந்தா படித்துக் காட்டினார்.

இந்து விரோத ஊடகங்களின் பொய் தகவல் பிரசாரத்திற்கு கைலாஸா கண்டனம்!

கைலாஸா அறிக்கை: பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு எதிரான, இந்துவிரோத ஊடகங்களின் சட்டவிரோதமான பொய் தகவல் பிரச்சாரத்திற்கு கைலாஸா கண்டனம் தெரிவிக்கிறது!
பல இந்துவிரோத ஊடக நிறுவனங்கள் வேண்டுமென்றே, தீய நோக்கத்துடன், சட்டவிரோதமான முறையில், ஜகத்குரு மஹா சன்னிதானம் (SPH) பகவான் நித்யானந்த பரமசிவம் தனது உடலை விட்டு பிரிந்துவிட்டதாக பொய் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பகவான் நித்யானந்த பரமசிவம் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், உயிருடனும், உத்வேகத்துடனும் இருப்பதாக கைலாஸா உறுதியாக அறிவிக்கிறது.

மார்ச் 30, 2025 அன்று, பகவான் நித்யானந்த பரமசிவம் உகாதி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு அனைத்து பக்தர்கள், சீடர்கள் மற்றும் 2 பில்லியன் இந்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் அளித்தார். பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை இழிவுபடுத்தவும் அவதூறு செய்யவும் தொடுக்கப்பட்ட இந்த தீய அவதூறு பிரச்சாரத்தை கைலாஸா திட்டவட்டமாக கண்டனம் செய்கிறது.

ஒருங்கிணைந்த அவதூறு பிரச்சாரத்தின் ஒரு பகுதியான இந்த தீய, சட்டவிரோதமான வெளியீடுகள் உலகளவில் 2 பில்லியன் இந்து பக்தர்களின் மத உணர்வுகளை காயப்படுத்தியுள்ளன.

இந்த தவறான தகவல் பிரச்சாரம், சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்ட மத சிறுபான்மையினரை முறையாக தாக்குவதை நோக்கமாக கொண்ட பரந்த குற்றவியல் சதியின் ஒரு பகுதி மட்டுமே. இந்த பிரச்சாரம் ஊடக அவதூறு, வெறுப்பு பேச்சு, மற்றும் ஒருங்கிணைந்த சட்டபோர் மூலம் தொடுக்கப்படும் இனப்படுகொலை நோக்கத்தின் தெளிவான அடையாளங்களை கொண்டுள்ளது.

இந்த அவதூறு பிரச்சாரத்தின் நேரம், மற்றும் பல ஊடக சேனல்கள் மூலமாக ஒருங்கிணைந்த வெளியீடு, தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை அதிகரிக்க வேண்டுமென்றே செய்யப்பட்ட உத்தியை குறிக்கிறது.
பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மீது இந்துவிரோத சக்திகளால் 70க்கும் மேற்பட்ட கொலை முயற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

நேரடி வழிகளில் தோல்வியடைந்ததால், இந்துவிரோத சக்திகள் இப்போது சட்டவிரோத போரை நாடுகின்றனர், இந்துவிரோத ஊடகங்களைப் பயன்படுத்தி பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் தனது உடலை விட்டு சென்றுவிட்டதாக தீய வதந்திகளை பரப்புகின்றனர். இந்துவிரோத கூட்டணியின் ஊடக பிரிவு இந்த பொய்யை விரைவாக கொண்டாடுவது, அவர்களின் ஆழமான வியூகத்தை வெளிப்படுத்துகிறது: பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை கொலை செய்வதற்கான ஒரு சூழ்ச்சியான திட்டத்திற்கு அடித்தளம் அமைப்பது.

இந்த ஒருங்கிணைந்த, சட்டவிரோத, அவதூறு தகவல் பிரச்சாரம் ஒரு “சட்டபோர்” – ஒரு மத சமூகத்தை துன்புறுத்த சட்ட செயல்முறைகளை ஆயுதமாக்குதல்.

இது பின்வருவனவற்றால் நிரூபிக்கப்படுகிறது:
பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு எதிரான சட்டபோருடன் அவதூறு வெளியீடுகள் உடனமைந்த நேரம். தொடர் தாக்குதலுக்கும் சட்டபோருக்கும் அடிப்படையாக பயன்படுத்தப்படும் அவதூறு தகவல்களை வெளியிடும் முறை. நம்பகத்தன்மையை உருவாக்க பல தளங்களில் தவறான கருத்துக்களை ஒருங்கிணைந்து வெளியிடுதல்.

கைலாஸா அனைத்து ஊடக நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை – இந்துவிரோத, சட்டவிரோதமான, தகவல் பிரச்சாரம் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலை வேண்டுமென்றே பரப்பும் – இந்த தீய சக்திகளை கண்காணிக்க அழைக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories