நவராத்திரியில்… உள்ளம் கவர்ந்த கொலு பொம்மைகள்!

golu1 - 2026
ஆதி – அந்திப் பிரபு / நாக கன்னி / பாரத மாதா

ஜெயஸ்ரீ எம். சாரி

நவராத்திரி என்னும் சுபராத்திரியின் மையமாய் இருப்பது கொலு பொம்மைகள் தான். பல வருடங்களாக, பரம்பரையாக கொலு தர்பார் வீற்றிருப்பதே நம் தமிழக இல்லங்களில் அழகு.

golu2 - 2026
கடோத்கஜன் / பாண்டி ஆடும் பெண்கள்

சரியாக 25 வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் இந்த வருடம் பலரது இல்லங்களில் வீற்றிருந்த கொலு தர்பாரை தரிசிக்கும், ரசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

golu3 - 2026
தாயக்கட்டை ஆடும் பெண்கள் / பல்லாங்குழி ஆடும் சிறுமிகள்

பலரும் இருக்கும் இந்த அவசர யுகத்திலும் கொலு தர்பாரை அலங்கரிப்பதில் அவர்களின் ஆர்வம் புலப்பட்டது. பழைய காலத்து பொம்மைகளின் அழகும், திருத்தமான வடிவமைப்பும், புது பொம்மைகளின் வண்ண வனப்பும் கண்களுக்கு விருந்தாய் அமைந்திருந்தன.

நான் கண்டு மகிழ்ந்த சில சுவாரஸ்யமான கொலு பொம்மைகளை இந்தக் கட்டுரையில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

golu4 - 2026
குயவர் / விவசாயி

‘ஆதி-அந்த பிரபு’வாய் ஒரே பொம்மையில் ஒரு பாதியில் கணபதியும், மறு பாதியில் அனுமனுமாய் காட்சியளித்தனர். பாரத மாதாவும் கம்பீரமாய் வீற்றிருந்தாள்.

golu5 - 2026
பச்சைக்கிளி / பொய்க்கால் குதிரையில் ஆண் – பெண்

பாம்பு டான்ஸ் ஆடும் நாக கன்னி, கடோத்கஜன் தனக்கு பிரியமான உணவு வகைகளுடனும், பாண்டி விளையாடும் இளைஞிகள், தாயக்கட்டை ஆடும் சிறுமியர்கள், பல்லாங்குழி விளையாடும் பெண்கள், குயவர், காய்கறி விற்கும் விவசாயி, விவசாயப் பெண்மணி, வயலிலிருந்து அறுவடை செய்ததை தலையில் சுமந்து வரும் பெண்…

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்
golu6 - 2026
தேசத்தலைவர்கள் / பூக்குடுவையில் அழகி

தத்ரூபமான பச்சைக் கிளி, பொய்க்கால் குதிரையில் ஆணும், பெண்ணும், தேசத்தலைவர்கள், மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், பூக்குடுவையில் மாடர்ன் அழகி, காகிதத்தினால் செய்யப்பட்ட மிருதங்கம், நாகஸ்வரம், மாக்கல்லினால் ஆன கல்லுரல், அம்மி, இயந்திரம், குழிப் பணியார பாத்திரம்….

golu7 - 2026
காகிதத்தால் செய்யப்பட்ட மிருதங்கம் / மாக்கல்லால் ஆன பொருட்கள்

கோனார் மற்றும் தாய்ப்பசுவிடம் பால் அருந்தும் கன்றுக்குட்டி, தாகத்திற்காக தண்ணீர் பானையில் காத்திருக்கும் காக்கை, மாட்டு வண்டிக்காரர், இசைக் கலைஞர்கள், வீட்டின் உள்ளே தன் பெண்ணிற்கு தலை பின்னிவிடும் தாய்…

golu8 - 2026
கோனார் மற்றும் பசு – கன்றுக்குட்டி / தாகமான காக்கை

கிணறு, குகனுடன் படகில் ராமர், இலக்குவன், சீதை, ஆரத்தழுவிய ராமன்- குகன், நட்பை விளக்கும் கண்ணன் – குசேலர், கிணற்றில் தண்ணீர் எடுக்கும் பெண்களும் அங்கேயே குளிக்கும் ஒரு பெண், பித்தளையில் சிறிய பாத்திரங்கள்…

golu9 - 2026
மாட்டு வண்டி / எம்.ஜி.ஆர்

கைலாச மலை, ஆற்று மணலில் பார்க், அயோத்தி ராம்லல்லா, நவராத்திரி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தாங்கிய ‘பேனர்’ எனப் பலவிதமான வித்தியாசமான பொம்மைகளை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

பெரும்பாலான இல்லங்களில் பண்டர்பூரின் ‘விட்டல் -ருக்மணி’ கொலுவில் எழுந்தருளியிருந்தனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
golu10 - 2026
இசைக் கலைஞர்கள் / வீட்டிற்குள் தலை சீவும் தாய்

‘பல இல்லங்களில் இன்னும் நிறைய பொம்மைகள் உள்ளன. பரணில் இருந்து எடுக்கத்தான் முடியவில்லை’ என்பதே பலரின் வார்த்தைகளாய் இருந்தன.

golu11 - 2026
காகிதத்தால் ஆன நாகஸ்வரம். / படகில் ராமனுடன் குகன்

இன்னும் ஒன்று சொல்ல மறந்தேனே! இப்பொழுது எல்லாம் கொலு தர்பாரை தரிசிக்க, ரசிக்க வரும் பெண்களுடன் விஜயம் செய்யும் ஆண்களுக்கும் நவராத்திரி பரிசுப் பொருட்களும் தருகிறார்கள்.

golu12 - 2026
கிணற்றங்கரை / பித்தளையால் ஆன சொப்புகள்

நவராத்திரியில் குழந்தைகள், பெண்கள், சில ஆண்களும் முப்பெருந்தேவிகளை ஆராதித்து பாடுகின்றனர். ‘தாண்டியா’ ஆட்டமும் பலரையும் தன்னுள் இழுத்துக் கொள்கிறது. இல்லம் வருவோரை கண்கவர் வண்ணக் கோலங்களும், ‘ரங்கோலியும்’ அருமையாய் வரவேற்கின்றன.

golu13 - 2026
ராமர் – குகன் மற்றும் கண்ணன் – குசேலர். / ஆற்று மணலால் செய்த பார்க். / கைலாச மலை

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பும் கொண்டாட்டமாக நவராத்திரி இருக்கிறது என்பதே ஒரு மகிழ்ச்சியாய், திருப்தியாய் இருப்பதை சொல்லவும் வேண்டுமோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories