
படிப்படியாக முன்னேறி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ரயில் சிலம்பு அதிவிரைவு ரயில்.12 ஆண்டுகளாக பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பில் இயங்கும் சிலம்பு அதிவிரைவு ரயில் முதலில் சென்னை மானாமதுரை இடையே வாரம் இருமுறை இயங்கி பின்னர் செங்கோட்டை க்கு நீடிக்கப்பட்டு தற்போது வாரத்தில் 3 நாட்கள் இயங்கி வரும் சிலம்பு அதி விரைவு ரயில் தினசரி இயங்குமா என தென்காசி விருதுநகர் சிவகங்கை மாவட்டத்தில் எதிர்பார்ப்பில் பயணிகள் உள்ளனர்.இந்த ரயில் தற்போது தாம்பரம் வரை இயங்குவதை பழையபடி சென்னை எழும்பூர் வரை இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
20681/82 செங்கோட்டை – தாம்பரம் இடையே புதுக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு அதிவிரைவு ரயில் இயங்கிவருகிறது.
கடந்த 2013 ஆண்டு புதுக்கோட்டை வழியாக வாரம் இரு முறை ரயிலாக காரைக்குடி – சென்னை எழும்பூர் இடையேயும் பிறகு மானாமதுரை – சென்னை எழும்பூர் இடையேயும், கடந்த 2017 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீடிக்கப்பட்டு, பிறகு 2019 முதல் வாரத்தில் 3 நாட்கள் இந்த வண்டி இன்று வரை பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு வரவேற்பில் இயங்கிவருகிறது.
முதலில் 17 பெட்டிகளுடன் இயங்கி வந்த இந்த வண்டி பயணிகளின் அமோக வரவேற்பில் 24 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது. ஆனாலும் கூட இந்த வண்டி வாரத்தில் மூன்று நாட்கள் தான் இயக்கப்படுவதால் பெரும்பாலான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை.
இந்த வண்டியை தினசரி இயக்க பல முறை பல ஆண்டுகளாக செங்கோட்டை முதல் புதுக்கோட்டை வரை இடைப்பட்ட பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தாலும் ரயில்வே கூறிய காரணங்கள்: “சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் எங்களிடம் மற்ற நாட்களில்(சிலம்பு இயங்கும் 3 நாட்கள் தவிர) பிளாட்பாரம் இல்லை” என்பது தான். ஆனால் கடந்த IRTTC 2024 ஆண்டு கூட்டத்தில் தென்னக ரயில்வே இந்த வண்டியை நிரந்தரமாக தாம்பரம் வரை மட்டுமே இயக்க முன்மொழிவு செய்து இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த வண்டியை தினசரி இயக்க அத்தனை சாத்திய கூறுகளும் உள்ள போதும், வாரத்தில் 3 நாட்கள் தான் இயங்கினாலும் பயணிகளிடையே இந்த ரயிலுக்கு வரவேற்பு சற்றும் குறையாத போதும், தென்னக ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து 12 ஆண்டுகளாக வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இயங்கும் இந்த சேவையை தினசரி சேவையாக மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்துவது ஏன் என தெரியவில்லை.
மேலும் புதுக்கோட்டை காரைக்குடி யில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல தினசரி வண்டிகள் எதுவும் கிடையாது. அதேபோல புதுக்கோட்டையில் இருந்து இரவில் புறப்பட்டு அதிகாலை 04:25 மணி அளவில் சென்னை(தாம்பரம்) சென்றடையும் தினசரி வண்டிகளும் எதுவும் இல்லை. இந்த இரண்டு தேவையையும் சிலம்பு தினசரியாக மாறினால் நிறைவேறும்.
எனவே பயணிகளின் பிரதான கோரிக்கையான சிலம்பு வண்டியை உடனடியாக தினசரி ரயில் ஆக்குவது குறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பயணிகளின் விருப்பமாக உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பணிவான கவனத்திற்கு 12 ஆண்டுகளாக பயணிகள் மத்தியில் அமோக_வரவேற்பில் வாரத்தில் 3 நாட்கள் இயங்கி வரும் சிலம்பு அதிவிரைவு ரயில் தினசரி ஆகுமா?என எதிர்பார்ப்பில் பயணிகள் உள்ளனர்.இதை நிறைவுற்ற எம்.பி க்கள் போதிய முயற்சி எடுக்கவேண்டும்





