சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாகுமா? எதிர்பார்ப்பில் மக்கள்!

railway news - 2026
#image_title

படிப்படியாக முன்னேறி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ரயில் சிலம்பு அதிவிரைவு ரயில்.12 ஆண்டுகளாக பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பில் இயங்கும் சிலம்பு அதிவிரைவு ரயில் முதலில் சென்னை மானாமதுரை இடையே வாரம் இருமுறை இயங்கி பின்னர் செங்கோட்டை க்கு நீடிக்கப்பட்டு தற்போது வாரத்தில் 3 நாட்கள் இயங்கி வரும் சிலம்பு அதி விரைவு ரயில் தினசரி இயங்குமா என தென்காசி விருதுநகர் சிவகங்கை மாவட்டத்தில் எதிர்பார்ப்பில் பயணிகள் உள்ளனர்.இந்த ரயில் தற்போது தாம்பரம் வரை இயங்குவதை பழையபடி சென்னை எழும்பூர் வரை இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

20681/82 செங்கோட்டை – தாம்பரம் இடையே புதுக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு அதிவிரைவு ரயில் இயங்கிவருகிறது.

கடந்த 2013 ஆண்டு புதுக்கோட்டை வழியாக வாரம் இரு முறை ரயிலாக காரைக்குடி – சென்னை எழும்பூர் இடையேயும் பிறகு மானாமதுரை – சென்னை எழும்பூர் இடையேயும், கடந்த 2017 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீடிக்கப்பட்டு, பிறகு 2019 முதல் வாரத்தில் 3 நாட்கள் இந்த வண்டி இன்று வரை பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு வரவேற்பில் இயங்கிவருகிறது.

முதலில் 17 பெட்டிகளுடன் இயங்கி வந்த இந்த வண்டி பயணிகளின் அமோக வரவேற்பில் 24 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது. ஆனாலும் கூட இந்த வண்டி வாரத்தில் மூன்று நாட்கள் தான் இயக்கப்படுவதால் பெரும்பாலான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை.

இந்த வண்டியை தினசரி இயக்க பல முறை பல ஆண்டுகளாக செங்கோட்டை முதல் புதுக்கோட்டை வரை இடைப்பட்ட பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தாலும் ரயில்வே கூறிய காரணங்கள்: “சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் எங்களிடம் மற்ற நாட்களில்(சிலம்பு இயங்கும் 3 நாட்கள் தவிர) பிளாட்பாரம் இல்லை” என்பது தான். ஆனால் கடந்த IRTTC 2024 ஆண்டு கூட்டத்தில் தென்னக ரயில்வே இந்த வண்டியை நிரந்தரமாக தாம்பரம் வரை மட்டுமே இயக்க முன்மொழிவு செய்து இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வண்டியை தினசரி இயக்க அத்தனை சாத்திய கூறுகளும் உள்ள போதும், வாரத்தில் 3 நாட்கள் தான் இயங்கினாலும் பயணிகளிடையே இந்த ரயிலுக்கு வரவேற்பு சற்றும் குறையாத போதும், தென்னக ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து 12 ஆண்டுகளாக வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இயங்கும் இந்த சேவையை தினசரி சேவையாக மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்துவது ஏன் என தெரியவில்லை.

மேலும் புதுக்கோட்டை காரைக்குடி யில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல தினசரி வண்டிகள் எதுவும் கிடையாது. அதேபோல புதுக்கோட்டையில் இருந்து இரவில் புறப்பட்டு அதிகாலை 04:25 மணி அளவில் சென்னை(தாம்பரம்) சென்றடையும் தினசரி வண்டிகளும் எதுவும் இல்லை. இந்த இரண்டு தேவையையும் சிலம்பு தினசரியாக மாறினால் நிறைவேறும்.

எனவே பயணிகளின் பிரதான கோரிக்கையான சிலம்பு வண்டியை உடனடியாக தினசரி ரயில் ஆக்குவது குறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பயணிகளின் விருப்பமாக உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பணிவான கவனத்திற்கு 12 ஆண்டுகளாக பயணிகள் மத்தியில் அமோக_வரவேற்பில் வாரத்தில் 3 நாட்கள் இயங்கி வரும் சிலம்பு அதிவிரைவு ரயில் தினசரி ஆகுமா?என எதிர்பார்ப்பில் பயணிகள் உள்ளனர்.இதை நிறைவுற்ற எம்.பி க்கள் போதிய முயற்சி எடுக்கவேண்டும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories