February 19, 2026, 5:22 PM
28.4 C
Chennai

ஸ்ரீ அரவிந்தர் அமர்ந்த நாற்காலியை பாதுகாக்கும் அமித் ஷா

1723147 amith sha - 2026

பாரத உள்துறை அமைச்சர் அமித் ஷா வின் கொள்ளு தாத்தாவும் தாத்தாவும் பரோடா மன்னராட்சிக்கு உட்பட்ட மானசா பகுதியில் நகர தலைவர்களாக (அரசரின் பிரதிநிதிகளாக) இருந்தனர். அப்போது அவர்கள் வீட்டுக்கு ஸ்ரீ அரவிந்தர் வந்து தங்கி உள்ளார். அவர் வீற்றிருந்த நாற்காலியை அமித் ஷா இன்றும் மரியாதையுடன் பாதுகாத்து வருகிறார்.

மிகவும் முற்போக்கான சிந்தனையும் இந்தியாவின் எதிர்காலம் பற்றிய தெளிவான கண்ணோட்டமும் கொண்டவராக இருந்தார் பரோடா மன்னர் சாயாஜி ராவ் கெய்க்வாட். இவர்தான் பீம்ராவ் (டாக்டர்) அம்பேத்கரை அமெரிக்காவுக்கு படிக்க உதவி தொகை கொடுத்து அனுப்பியவர். இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவுடன் இவரிடம் அதிகாரியாக பணிபுரிந்தவர் ஸ்ரீ அரவிந்தர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது :

கெய்க்வாட் தனக்கு மிகவும் நம்பிக்கையான மூத்த அதிகாரிகளை குஜராத்தில் இருந்த பிற இளவரசர்கள், உயர் அதிகாரிகளிடம் அனுப்பி தான் மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் முற்போக்கான திட்டங்களை பற்றி எடுத்துரைப்பார்.

அப்படி மானசாவின் (இன்றைய காந்திநகர் மாவட்டத்தில் உள்ள பகுதி) நகர தலைவராக இருந்த என் கொள்ளு தாத்தாவிடம் பேச ஸ்ரீ அரவிந்தரை அனுப்பினார்.

ஸ்ரீ அரவிந்தர் எங்கள் இல்லத்தில் தங்கியிருந்து என் கொள்ளு தாத்தாவிடம் ஆட்சி மற்றும் நிர்வாகம் பற்றிய மகாராஜாவின் 19 அம்ச திட்டத்தை பற்றி எடுத்துக் கூறினார்.

‘அரசர் எப்போதும் செல்வாக்குள்ள தனி நபர்களின் நலனை விட பொது ஜனங்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்’ என ஸ்ரீ அரவிந்தர் எங்கள் குடும்ப மூத்தவர்களிடம் சொன்னதாக என் தாத்தா அடிக்கடி என்னிடம் கூறியுள்ளார். அவர் (ஸ்ரீ அரவிந்தர்) அமர்ந்திருந்த நாற்காலி எங்கள் வீட்டில் இன்னமும் உள்ளது.

அந்த நாற்காலியை காட்டி இதில் மிக உயர்ந்த மனிதர் ஒருவர் உட்கார்ந்து உள்ளார். எனவே இது பாதுகாக்க வேண்டுமென என்னிடம் தாத்தா கூறியுள்ளார். எனவே அதை நான் இன்றும் பாதுகாத்து வருகிறேன். அந்த நாற்காலி இன்னமும் உறுதியாக, நன்றாக உள்ளது’ என்று அமித்ஷா கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

Entertainment News

Popular Categories