ஹால்தி குங்கும் கொடுக்க… கொண்டாட்டத்தின் சாரம் இதான்!

kondattam jayashree articles - 2026
#image_title

– ஜெயஸ்ரீ எம். சாரி, நாந்தேட்

நம் தாய்திருநாட்டில் இந்திய காலெண்டர் மாதங்களில் பெரும்பால மாதங்களில் பலவிதான விழாக்களும், கொண்டாட்டங்களும் நடைபெறும்.

நமக்கு தை மிகவும் மகத்துவமான மாதமாய் இருப்பதைப் போலவே மஹாராஷ்டிராவிலும் ‘பௌஷ்’ ( தை) மாதம் பிரசித்தமானது.

சுமங்கலிப் பெண்களை இல்லத்திற்கு அழைத்து மஞ்சள் குங்குமம் ( ஹல்தி – கும்கும்) கொடுத்து ஒரு பரிசும் கொடுப்பார்கள்.

சாதி வேறுபாடு, ஏழை – பணக்காரர் பாகுபாடு இல்லாமல் அனைவரும் இந்தக் கொண்டாடத்திற்கு அழைப்பார்கள். அனைவரும் தயங்காமலும் செல்வார்கள். 

சில வருடங்களுக்கு பிறகு எனக்கும் அவர்களின் முறை பழக்கமாகி விட்டது. 

ஹல்தி கும்கும் நடக்கும் அன்று அவர்கள் போடும் ரங்கோலிகள், வீட்டை அலங்கரிக்கும் முறை, தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் விதம், பரிசுப் பொருட்கள், எள் – வெல்லத்தினாலான இனிப்பு என பல விதமான விஷயங்களால் இந்த நிகழ்வே சுவாரஸ்யமாக இருக்கிறது.  ஹல்தி கும்கும் நிகழ்ச்சியை அனைவரும் ஒரே இடத்தில் கூடியும் செய்வார்கள். 

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

மஹாராஷ்டிராவில் இப்போது வரை நான் இருந்த இடங்களில் எல்லாம் நானும் அவர்களைப் போலவே அனைவரையும் அழைத்து ஹல்தி கும்கும் கொடுப்பேன். 

இப்போது நான் வசித்துக் கொண்டிருக்கும் நாந்தேட் நகரில் சில தவிர்க்க முடியாத காரணங்களிலால் கடந்த இரண்டு வருடங்களில் என்னால் இந்தக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை. இந்த வருடம் இங்கு எங்களுக்கு மூன்றாம் வருடம். என் கணவரின் வேலையில் இடமாற்றம் இருக்கும் என்பதால் அடுத்த வருடம் இங்கே இருப்போமா என்று இப்போது சொல்ல முடியாது.

அதனால், இந்த முறை   செய்து விட வேண்டுமென்று நான் முடிவு செய்தேன். ஆனால், இத்தனை நாட்களிலும் ஏதோ ஒரு விஷயத்தினால் நாளைக்கு அனைவரையும் கூப்பிடலாம், இரண்டு நாட்களுக்கு பிறகு கூப்பிடலாம் என்று யோசித்து யோசித்தே நாட்கள் சென்றன. நான் கடைசியில் கடைசி தை  வெள்ளிக்கிழமை கூப்பிட யோசித்து வைத்திருந்தேன்.

வருபவர்களுக்கு ஒரு ‘நாஷ்தா’ (Snacks) கொடுக்கலாம் என்றிருந்தேன். அதனால், எங்கள் இல்லத்தில் வேலை செய்யும் பணிப்பெண்ணான ஸ்வாதியிடம் “வெள்ளிக்கிழமை உன் பெண்ணை அனுப்புகிறாயா, வருபவர்களுக்கு ஸ்நாக்ஸ் கொடுக்க உதவியாய் இருக்கும்,” என்று கேட்டேன். உடனே, கண்டிப்பா அனுப்பறேன், என்றாள் ஸ்வாதி.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

வெள்ளிக்கிழமை அமாவாசையும் இருந்ததால் ஹல்தி கும்கும் வைக்க முடியவில்லை. அப்புறம், ஒரு நாள் வைக்கலாம் என்று முடிவெடுத்தேன். அதை ஸ்வாதிக்கு சொல்ல நினைத்திருந்தேன்.

அதற்குள் வியாழக்கிழமையே  ஸ்வாதி ” நாளைக்கு நாங்கள் வெளியூர் செல்கிறோம்.  நீங்க ஹல்தி – கும்கும் வெச்சா எங்களால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாதே, நீங்களே சமாளித்து விடுவீர்களா” என்றாள். ஓ! என்னைப் பற்றி இவ்வளவு யோசிக்கறாளே, ஸ்வாதிக்கு தான் இன்றைய வருடத்தின் முதல் ஹல்தி – கும்கும் கொடுக்க வேண்டும் என்று என் மனதில் பட்டது.

அதுவும் அப்பவே கொடுக்க முடிவு செய்தேன். பத்து நிமிடங்களில் கடகடவென்று தயார் செய்தேன். நானும் தயாரானேன். ஸ்வாதிக்கு ஹல்தி – கும்கும் கொடுத்து கற்பூரவல்லி செடி ஒன்றும் கொடுத்தேன். பின்னர் இல்லம் அருகில் இருந்த இருவரை அழைத்து நிகழ்ச்சியை தொடர்ந்தேன்.

ஸ்வாதி என் மேல் காட்டிய அக்கறையோ, கரிசனமோ தெரியவில்லை. ஸ்வாதி மூலமாக இந்த வருட ஹல்தி – கும்கும் கொண்டாட்டம் எனக்கு மிகுந்த மனநிறைவை தந்தது. 

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

கொண்டாட்டத்தின் சாரமும் அதுதானே!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories