‘இலக்கிய’ கந்த சஷ்டி விழா!

thejas foundation - 2026
  • மீ.விசுவநாதன்

தேஜஸ் பௌண்டேஷன் அமைப்பு சென்னை, மயிலாப்பூர் YMIA அரங்கில் கந்தஷட்டி விழாவை முன்னிட்டு நேற்று மாலை ஐந்தரை மணிமுதல் எட்டு மணி வரை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

முதலில் வேத கோஷத்துடன் வேல் பூஜையை செய்தபின் முறையான வரவேற்பு. அதன் பிறகு கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியனின் சிற்றுரைக்குப் பிறகு கவிமாமணி மதிவண்ணன் அவர்களின் திருப்புகழ் உரை துவங்கி சரியாக ஏழு நாற்பதுக்கு நிறைவுற்றது.

கவிமாமணி மதிவண்ணன் அவர்களுடன் அடியேனுக்கு 1974 ஆம் வருடம் முதலே நட்புண்டு. அவர் தனது கவிதைகளை “பாரதி கலைக்கழகக் கவியரங்கங்களில் படிக்கும் முறையே அழகாக இருக்கும். பாரதி சுராஜ், பேராசிரியர் நாகநந்தி, கவிமாமணிகள் நா.சீ. வரதராஜன், வ.வே.சு., புதுவயல் செல்லப்பன், ஐயாரப்பன், இளையவன், இளந்தேவன், அமரசிகாமணி போன்ற கவிஞர்களும் மகிழ்ச்சி பொங்கக் கைகளைத் தட்டி ரசித்த பொற்காலத்தை மீண்டும் நேற்று நினைத்துக் கொண்டேன்.

உரையின் நடுவில் கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. அவர்களை வரகவி என்றும், ஒரு கவியரங்க நிகழ்ச்சியில் கையில் ஒரு குறிப்பும் இல்லாமலே கொடுத்த தலைப்புக்கு அருவிபோலக் கவிமழை பொழிந்ததாகவும் சொன்னபோது மகிழ்ந்தேன்.

இப்படி ஒருவர் புகழை மற்றவர் சொல்லிக் கேட்கத்தான் பெருமையாக இருக்கிறது .

முருகனின் பெருமையை எத்துணையோ பெரியோர்கள் வியந்து, பணிந்து, விநயமுடன் பாடிப் பரவசம் கொண்ட வரலாற்றை வாகீசகலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்கள் எங்கள் ஊர் கல்லிடைகுறிச்சியில் கந்தப்புரம் தெருவில் உள்ள ஒரு மண்டபத்தில் கந்தபுராணச் சொற்பொழிவில் பக்தித் தேன் சொட்டச் சொட்டச் சொன்னது இன்றும் இனிக்கத்தான் செய்கிறது. கி.வா.ஜ. உரையை முடித்ததும் அவர்க்கு ஊர்ப் பெரியவர்கள் ஸ்ரீ முருகன் கோவில் பிரசாதங்கள் தந்து மரியாதை செய்தனர். பிறகு நன்றியுரை கூறச் சென்ற பெரியவரிடம்,” நீங்கள் முருகனின் பெருமையை மட்டும் கூறுங்கள். .என்னைப் பற்றிய புகழுரைகள் வேண்டாம்” என்று காதோரம் சொன்னதை அந்தப் பெரியவர் என்னிடம் பகிர்ந்து கொண்டு,” நிறைகுடம்…அவருக்கு அவருடைய குருநாதர் உ.வெ.சா. மற்றும் முருகனின் பெருமைகளைப் பேசவும், கேட்கவுமே பிடிக்கும் என்றார். அது அன்று நான் கொண்ட கொள்முதல்.

கவிமாமணி மதிவண்ணன் அவர்களின் நேற்றைய திருப்புகழ் உரையில் இருந்து அடியேன் கொண்ட கொள்முதல்கள் இரண்டு:

1) காலம் பொன் போன்றது; போனால் வராது என்பார்கள். இல்லை. பொன் போனால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம். காலம் போனால் போனது தான். அதனால் காலம் உயிர் போன்றது என்று “காலத்தின் பெருமையை” உணர்த்தினார்.

2) வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்களது ஆழ்ந்த கல்வியையும், கவிச்சிறப்பையும் விளக்கி, அவரிடம் இருந்த தனடக்கத்தையும், அதற்குக் காரணம் முருகனின் திருப்புகழை மட்டுமே அவர் வாய்மணக்கப் பேசி தற்புகழை மறுத்தார் என்பதும் தான்.

நிகழ்ச்சியை கவித்துவமாக மிக அழகாகத் தொகுத்து வழங்கிய கவிஞர், நாடக ஆசிரியர், எழுத்தாளர் சி.வி.சந்திரமோகனுக்குப் பாராட்டுகள்.

எழுத்தாளர் இந்திரநீலன் சுரேஷ் கச்சிதமான நன்றியுரையுடன் நிகழ்ச்சி “கற்றதும், பெற்றதுமாக” நிறைவு பெற்றது.

வந்திருந்த அனைவருக்கும் பூஜை செய்த வேல், கைக்கும் அடக்கமான கந்தஷட்டி கவச நூல் ஒன்றும் தந்து மகிழ்வித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories