February 17, 2025, 8:22 PM
27.9 C
Chennai

‘இலக்கிய’ கந்த சஷ்டி விழா!

  • மீ.விசுவநாதன்

தேஜஸ் பௌண்டேஷன் அமைப்பு சென்னை, மயிலாப்பூர் YMIA அரங்கில் கந்தஷட்டி விழாவை முன்னிட்டு நேற்று மாலை ஐந்தரை மணிமுதல் எட்டு மணி வரை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

முதலில் வேத கோஷத்துடன் வேல் பூஜையை செய்தபின் முறையான வரவேற்பு. அதன் பிறகு கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியனின் சிற்றுரைக்குப் பிறகு கவிமாமணி மதிவண்ணன் அவர்களின் திருப்புகழ் உரை துவங்கி சரியாக ஏழு நாற்பதுக்கு நிறைவுற்றது.

கவிமாமணி மதிவண்ணன் அவர்களுடன் அடியேனுக்கு 1974 ஆம் வருடம் முதலே நட்புண்டு. அவர் தனது கவிதைகளை “பாரதி கலைக்கழகக் கவியரங்கங்களில் படிக்கும் முறையே அழகாக இருக்கும். பாரதி சுராஜ், பேராசிரியர் நாகநந்தி, கவிமாமணிகள் நா.சீ. வரதராஜன், வ.வே.சு., புதுவயல் செல்லப்பன், ஐயாரப்பன், இளையவன், இளந்தேவன், அமரசிகாமணி போன்ற கவிஞர்களும் மகிழ்ச்சி பொங்கக் கைகளைத் தட்டி ரசித்த பொற்காலத்தை மீண்டும் நேற்று நினைத்துக் கொண்டேன்.

உரையின் நடுவில் கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. அவர்களை வரகவி என்றும், ஒரு கவியரங்க நிகழ்ச்சியில் கையில் ஒரு குறிப்பும் இல்லாமலே கொடுத்த தலைப்புக்கு அருவிபோலக் கவிமழை பொழிந்ததாகவும் சொன்னபோது மகிழ்ந்தேன்.

இப்படி ஒருவர் புகழை மற்றவர் சொல்லிக் கேட்கத்தான் பெருமையாக இருக்கிறது .

முருகனின் பெருமையை எத்துணையோ பெரியோர்கள் வியந்து, பணிந்து, விநயமுடன் பாடிப் பரவசம் கொண்ட வரலாற்றை வாகீசகலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்கள் எங்கள் ஊர் கல்லிடைகுறிச்சியில் கந்தப்புரம் தெருவில் உள்ள ஒரு மண்டபத்தில் கந்தபுராணச் சொற்பொழிவில் பக்தித் தேன் சொட்டச் சொட்டச் சொன்னது இன்றும் இனிக்கத்தான் செய்கிறது. கி.வா.ஜ. உரையை முடித்ததும் அவர்க்கு ஊர்ப் பெரியவர்கள் ஸ்ரீ முருகன் கோவில் பிரசாதங்கள் தந்து மரியாதை செய்தனர். பிறகு நன்றியுரை கூறச் சென்ற பெரியவரிடம்,” நீங்கள் முருகனின் பெருமையை மட்டும் கூறுங்கள். .என்னைப் பற்றிய புகழுரைகள் வேண்டாம்” என்று காதோரம் சொன்னதை அந்தப் பெரியவர் என்னிடம் பகிர்ந்து கொண்டு,” நிறைகுடம்…அவருக்கு அவருடைய குருநாதர் உ.வெ.சா. மற்றும் முருகனின் பெருமைகளைப் பேசவும், கேட்கவுமே பிடிக்கும் என்றார். அது அன்று நான் கொண்ட கொள்முதல்.

கவிமாமணி மதிவண்ணன் அவர்களின் நேற்றைய திருப்புகழ் உரையில் இருந்து அடியேன் கொண்ட கொள்முதல்கள் இரண்டு:

1) காலம் பொன் போன்றது; போனால் வராது என்பார்கள். இல்லை. பொன் போனால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம். காலம் போனால் போனது தான். அதனால் காலம் உயிர் போன்றது என்று “காலத்தின் பெருமையை” உணர்த்தினார்.

2) வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்களது ஆழ்ந்த கல்வியையும், கவிச்சிறப்பையும் விளக்கி, அவரிடம் இருந்த தனடக்கத்தையும், அதற்குக் காரணம் முருகனின் திருப்புகழை மட்டுமே அவர் வாய்மணக்கப் பேசி தற்புகழை மறுத்தார் என்பதும் தான்.

நிகழ்ச்சியை கவித்துவமாக மிக அழகாகத் தொகுத்து வழங்கிய கவிஞர், நாடக ஆசிரியர், எழுத்தாளர் சி.வி.சந்திரமோகனுக்குப் பாராட்டுகள்.

எழுத்தாளர் இந்திரநீலன் சுரேஷ் கச்சிதமான நன்றியுரையுடன் நிகழ்ச்சி “கற்றதும், பெற்றதுமாக” நிறைவு பெற்றது.

வந்திருந்த அனைவருக்கும் பூஜை செய்த வேல், கைக்கும் அடக்கமான கந்தஷட்டி கவச நூல் ஒன்றும் தந்து மகிழ்வித்தனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.17 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரன் குன்றத்துக்காக குரல் கொடுங்க! மதுரை வந்த பவன் கல்யாணிடம் ‘கோரிக்கை’!

எனது நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது, இப்போது நிறைவேறி இருக்கிறது என்று செய்தியாளர்களிடம்

பஞ்சாங்கம் பிப்.16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றக் கோரி கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்!

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சி பி சி ஐ டி க்கு மாற்றக்கோரி கிராமத்தினர் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

பந்தளம் ஐயப்பன் மாசி உத்திர அவதார நன்னாள் கோலாகலம்!

கேரளத்தில் பிரசித்தி பெற்ற பந்தளம் வலிய கோயிக்கல் ஐயப்பன் கோயிலில் மாசி உத்திரமான இன்று, சுவாமி ஐயப்பனின் ஜன்ம தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் பிப்.17 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரன் குன்றத்துக்காக குரல் கொடுங்க! மதுரை வந்த பவன் கல்யாணிடம் ‘கோரிக்கை’!

எனது நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது, இப்போது நிறைவேறி இருக்கிறது என்று செய்தியாளர்களிடம்

பஞ்சாங்கம் பிப்.16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றக் கோரி கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்!

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சி பி சி ஐ டி க்கு மாற்றக்கோரி கிராமத்தினர் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

பந்தளம் ஐயப்பன் மாசி உத்திர அவதார நன்னாள் கோலாகலம்!

கேரளத்தில் பிரசித்தி பெற்ற பந்தளம் வலிய கோயிக்கல் ஐயப்பன் கோயிலில் மாசி உத்திரமான இன்று, சுவாமி ஐயப்பனின் ஜன்ம தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Astro around Indian Stock Market and our future generation!

Indian Stock Market : For the consecutive 8th session Indian markets are in negative barring one or two of flat closing.

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

Entertainment News

Popular Categories