கடல் கொண்ட பழைய துவாரகை! அன்று ஆய்வாளர்களால் வெளிப்பட்டது! இன்று மோடியால் பிரபலம்!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

modi in gujrat dwaraka - 2026

22 வருடம் முன் சென்னையைச் சேர்ந்த NIOT National Institute of Ocean Technology குழு இதே துவாரகா கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, துவாரகை நகரம் கடலில் மூழ்கியதன் முழு அவுட்பிரிண்ட் ஒன்றை வெளிக் கொண்டு வந்தார்கள். அப்போது அங்கிருந்து கொண்டு வரப்பட்ட சின்னச் சின்ன பொருள்களை காட்சிக்கு வைத்திருந்தார்கள்.

அந்நாளில் சென்னை ஐஐடி வளாகத்தில் அமைந்திருந்த என்.ஐ.ஓ.டியின் அலுவலகம் சென்று இதே பொருள்களை கைகளில் எடுத்துப் பார்த்து பரவசப்பட்டேன். அதை அன்று விஜயபாரதம் வார இதழில் ஒரு கட்டுரையாகவும் எழுதினேன். 

இப்போது பிரதமர் மோடி அந்த இடத்துக்கு நேரில் சென்று, அங்கே கிருஷ்ணன் காலடி பட்ட பூமியைத் தன் கைகளால் ஒற்றிக்கொண்டு பக்தி பூர்வமான வணக்கத்தைச் செலுத்தியதைப் பார்த்ததும் அந்த மயிற்பீலிகளைப் போன்று நினைவலைகள் நேரலைகளாய் நெஞ்சத்தை வருடுவதை உணர்ந்தேன்.

2002ல் சென்னை ஐஐடி வளாகத்தில் NIOT – National Institute of Ocean Technology – குழுவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர்கள் குஜராத்தின் காம்பே மற்றும் கட்ச் வளைகுடா பகுதிகளில்  கடல் சார் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.. 

 துவாரகை நகரம் கடலில் மூழ்கிய விபரங்களை சேகரித்தார்கள். இன்றைய துவாரகை கடற்கரையிலிருந்து கடலின் உள்ளே சற்று தொலைவில் ஒரு நகரம் கடலில் மூழ்கியதன் படிமங்களை கண்டெடுத்து வந்தார்கள்.. அவற்றில் சில பொருள்கள் கார்பன் டேட்டிங் முறையில் ஆய்வு செய்வதில் 5000 ஆண்டு பழமையை பறை சாற்றின. 

துவாரகை நகரம் இருந்ததும் அது அழிந்த விவரமும் வரலாற்றுப் பதிவு என்பது உலகிற்கு தெளிவாக புலனானது… மகாபாரதம் வெறும் கதை அல்ல அது நம் முன்னோரின் வாழ்க்கை சரித்திரம் என்ற உண்மை வலுவாக பதிந்தது… அந்தக் குழுவினரை கண்டு அவர்கள் சேகரித்த பொருள்களை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்… அந்த சந்திப்பின் சிறு தொகுப்பு அப்போதைய விஜயபாரதம் வார இதழில் பிரசுரமானது… 2002 மார்ச் 1ல் வெளியான அந்தக் கட்டுரையின்  மீளுருவாக்கம் இங்கே… 

***

ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும்!

பாரதத்தின் பழமையான நாகரிகத்தை வெளிப்படுத்திய NIOT குழுவினர்

சென்ற வார விஜயபாரதம் இதழில், புராதன பாரதம் என்ற தலைப்பில் முகப்புக் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. குஜராத் காம்பே வளைகுடா பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த நாகரீகம் ஒன்று வெளிப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது சுட்டுரை. குறிப்பிடப்பட்டிருந்தபடி, இந்த ஆராய்ச்சிகளுக்கு மூலகாரணமான NIOT குழுவினரைச் சந்திக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. குஜராத் மாநில காம்பே வளைகுடாவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இக் குழுவினரைச் சந்தித்து, அவர்களது அனுபவங்களைக் கேட்கலாம் என்று எண்ணினோம். இக்குழுவினைத் தலைமையேற்று வழிநடத்திய டாக்டர் எஸ். கதிரொளி இன்முகத்தோடு நம்மை வரவேற்று அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இக்குழுவில் பங்கேற்ற திரு. எஸ். பத்ரிநாராயணன திரு. டி. வெங்கடராவ் ஆகியோரையும் சந்தித்து உரையாடினோம்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

அவர்களுடன் நடைபெற்ற உரையாடலிலிருந்து…

நீங்கள் இருப்பதோ சென்னை. குஜராத் கடற்கரைப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது. அதற்கான உந்துதல் என்ன?

சென்னையிலிருந்து கொல்கத்தா வரையிலான வங்காள விரிகுடா பகுதியிலும், மேற்குப் பகுதியான அரபிக்கடல் பகுதியிலும், எங்களுக்குச் சொந்தமான இரண்டு படகுகள் வழக்கமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. எனவே யதேச்சையாகத்தான் எங்கள் குழு அரபிக்கடல் பகுதியில், வழக்கமான கடல் மாசு அளவிடும் பணியில் ஈடுபட்டது. இதற்கென தனிப்பட்ட காரணங்கள் எதுவும் கிடையாது.

குஜராத் கடற்பகுதியில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி

குஜராத் மாநிலத்தில் உள்ள சுட்ச் பகுதியிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில், காம்பே வளைகுடா பகுதியில் நாங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தோம். வழக்கமாக கடல் நீருக்குள் படம் எடுக்க உதவும் கருவிகளைக் கொண்டு படம் எடுக்க முயன்றோம். ஆனால் படம் தெளிவில்லாமல் இருந்தது. கடல் நீர் மிகவும் மாசடைந்து, கலங்கிய நிலையில் இருந்ததால், படம் சரியாகக் கிடைக்கவில்லை. பிறகு சைடு ஸ்கேனர் கருவியின் உதவியுடன் படம் எடுக்கப்பட்டது.

முதலில் யதேச்சையாகத்தான் சென்று திரும்பினோம். பிறகு ஒருநாள், சைடு ஸ்கேனரில் பதிவாகிய படங்களை ஆராய்ந்ததில், எங்களுக்குச் சில தடயங்கள் கிடைத்தன. படங்கள் எடுக்கப்பட்ட அந்தப் பகுதியின் கீழ், ஏதோ ஒரு நகரம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிந்தது. எனவே மீண்டும் ஒரு முறை அங்குச் செல்லலாம் என்று எண்ணி, எங்கள் குழு அங்குச் சென்றது. இவ்வாறு சுமார் இரண்டு மூன்று முறை சென்றுள்ளோம்.

நாங்கள் ஒரு முறை கடல் பகுதியில் சென்று வரவேண்டும் என்றால் அதற்கு லட்சக்கணக்கில் செ வாளும் எனவே தனிநபராக இருந்தால், பணம் செலவழித்துக்கொண்டு இவ்வாறு செல்லமுடியாது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அதன் உதவியின்பேரிலேயே இந்தப் பயணம் தொடர்ந்தது.”

இந்தப் புதிய நகரத்தின் கண்டுபிடிப்பில் தங்கள் குழுவினரின் முயற்சிகள்

கடந்த 2000 ஆவது வருடத்தின் கடைசியில் முதன் முதலாகச் சென்றிருந்தோம். அதன்பிறகு மார்ச் மாதத்திலும் பிறகு மே மாதத்திலும் சென்றிருந்தோம். அப்போதுதான் அந்தப் பகுதியில் ஏதோ ஒரு பழைய நகரம் இருப்பதற்கான சுவடுகள் தென்பட்டன. உடனே அவற்றைப் படம்பிடித்துக்கொண்டு திரும்பினோம். அதை உடனே அரசுக்குத் தெரியப்படுத்தினோம். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. முரளி மனோகர் ஜோஷிக்கு இந்த விவரம் தெரியவந்தவுடன், அவர் உடகே பத்திரிகையாளர்கள். தெரியப்படுத்தினார். மூலம் வெளியுலகுக்கு

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

நீங்கள் கண்டறிந்த அந்த நகரத்தின் நகரமைப்பு எப்படி இருந்தது? அந்தக்கால மக்களது நாகரீகத்தைப் பற்றி ஏதாவது அனுமானிக்க முடிந்ததா?

சுமார் ஒன்பது கி.மீ நீளத்திற்கு அந்த நகரம் பரந்து கிடந்தது. நகரின் மத்தியில் ஒரு பெரிய நதி ஓடிய தடம் தெரிந்தது. மதிற்கவர்கள், சிறிய சிறிய அணைக்கட்டுகள், மிகப்பெரிய நெற்குதிர்கள், அருக்கு நடுவில் பெரிய என்றி ஒழுங்காகக் கட்டமை ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்டதுபோல் இருந்தது அந்த நகரம். அந்தக்காலத்திலேயே உணவைப் பாதுகாத்து வைப்பதிலும், நல்லமுறையில் அவற்றை வினியோகிப்பதிலும் நிபுணர்களாக அவர்கள் விளங்கியிருக்கின்றனர் என்பது இதன்மூலம் தெரியவந்தது. மேலும் கட்டடங்களுக்கு அவர்கள் மிகத்துல்லியமாக அஸ்திவாரம் போட்டு, அவற்றில் பெரிய பெரிய கட்டடங்களை எழுப்பியுள்ளனர்.

சுமார் 6 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பெரிய அளவில் கடல்மட்டம் உயர்ந்துள்ளது. சமயத்தில் 30 அடி ஆழத்தில் இந்த நகரம் கடலில் மூழ்கியிருக்கலாம். எஞ்சிய மக்கள் தங்களது அமைத்துக்கொள்ள நிலப்பகுதியை நோக்கி முன்னேறியிருக்கிறார்கள். அப்படி நிலப்பகுதியை நோக்கி நகர்ந்தவர்கள்தான் ஹாப்பாவில் குடியேற்றத்தை உருவாக்கியிருக்கலாம். ஏனெனில் இந்த நகரமைப்பிலிருந்து சற்று மேம்பட்டதாக ஹாப்பா விளங்கியிருப்பதால், ஹாப்பா நாகரீசுத்தின் முன்னோர்களாக நாம் இவர்களைக் கருதலாம். குடியிருப்புகளை புதிய

உங்களது ஆராய்ச்சியின் முடிவுகளை எல்லோரும் உடனே ஏற்றுக்கொண்டார்களா?

முதலில் இதனை எவரும் நம்பவில்லை. வழக்கம்போல், இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள், இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. எங்களுக்கேகூட முதலில் பயமாக இருந்தது – எங்கே நமது முயற்சிகள் எல்லாம் இவ்வாறு உதாசீனப்படுத்தப் பட்டுவிடுமோ என்று! ஏனெனில், இப்போதிருக்கும் மத்திய அரசு எதைச் செய்தாலும் குற்றம் காணும் இடதுசாரி சிந்தனையாளர்கள், இந்த விஷயத்திலும் அலட்சியம் காட்டவே, எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதன்பிறகு எப்படியாவது இவர்கள் எல்லாம் நம்பும்படியாக தேனும் தடயங்களைச் சேகரித்துக் கொண்டுவந்தார். என்ன என்று தோன்றவே, அம்முயற்சியில் இறங்கினோம்.

ஏதாவது தடயங்கள் கிடைத்தனவா?

நிறைய தடயங்கள் கிடைத்தன. இம்முறை கடந்த 2001 டிசம்பரில் சென்றபோது, காம்பே வளைகுடா பகுதியில் இருந்து, மிகவும் சிரமப்பட்டு பல்வேறு பொருட்களைச் சேகரித்தோம். சிறியதும் பெரியதுமாக சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களைச் சேகரித்து வந்தோம். மொத்தமாக எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு, பிறகு அவற்றைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்தோம். அப்போது நாங்கள் பட்ட சிரமங்கள் எங்களுக்குத்தான் தெரியும். அந்தப் பொருட்களை நன்றாகச் சுத்தம் செய்து பார்த்தபோது, அவற்றில் பெரும்பாலான பொருட்கள் எங்களை மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கின.

அவற்றில் என்னென்ன பொருட்கள் இருந்தன?

மிகவும் ஆச்சரியப்படும் விதத்தில், கற்களால் ஆன பொருட்களே கிடைத்தன. சிறு சிறு கருவிகள் கற்களால் செய்யப்பட்டதாகவே இருந்தன. கையில் மிகச் சரியாகப் பொருந்திப் பிடிப்பதற்கு வசதியாக உள்ளவாறு கல்லாலேயே கத்திகள், வெட்டுவதற்கு உபயோகப்படும் அரிவாள் போன்றவையெல்லாம் கிடைத்தன. குறிப்பாக, முகச்சவரம் செய்வதற்கு அவர்கள் உபயோகித்த மிகவும் சிறியதான கூர்மையான பிளேடு போன்ற கற்கள் எங்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. இன்றைய நவீன தொழில்நுட்பத்தில், இரும்பை வைத்துத் தயாரித்து நாம் உபயோகிக்கும் பல பொருட்களை அந்தக் காலத்திலேயே அவர்கள் கற்களால் செய்து வைத்திருந்தது பெரும்

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

வியப்பைத் தந்த இயந்திரங்களில் காணப்படும் எஞ்சினியரிங் கு போன்று, கற்களைப் பயன்படுத்தியே பல இயந்திர உருவாக்கியிருக்கிறாக்கள். ஒன்றோடு ஒன்று பொருந்தி, அப்படியும் இப்படியுமாக ஒரே அச்சில் சுற்றியவாறு இயங்கும் வகையில் இயந்திர பாகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

காம்பே வளைகுடாவிலிருந்து கிடைத்த சுற்களாலான பொருட்கள், மனித முதுகெலும்பு, பல தாடை ஆகியவை ஒட்டுவதற்கு இரண்டு கற்களை ஒன்றோடு பசைபோட்டு ஒட்டியிருக்கிறார்கள். கற்களை அவர்கள் என்னவிதமான பசையை உபயோகப்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை. பல்வேறு கற்களில் மிகமிகச் சிறிய ஊசி நுழையும் அளவிற்கு துளைகள் இட்டிருக்கிறார்கள் குறிப்பாக கல்லினாலேயே செய்யப்பட்ட ஊதல், அதாவது விசில் ஒன்றைப் பார்த்து நாங்கள் அசந்தேபோனோம்.

சிறுசிறு முத்துக்கள், பவளக்கற்கள், ஆபரணங்கள், அணிகலன்களில் உபயோகப்படுத்தும் கற்கள் என்று மிகச் சிறிய பொருட்கள் கிடைத்தன. அத்துடன் மரத்துண்டுகளும் கிடைத்தன. அதை வைத்துத்தான் கார்பன்டேட்டிங் முறையில் அதன் காலத்தைக் கணக்கிட்டோம். அதில் கிடைத்தபடி, அந்த மரத்துண்டுகள் இன்றிலிருந்து சுமார் எட்டாயிரம் ஆண்டுகள் முந்தையதாக இருந்தன.

மேற்கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?

முதலில் எங்கள் குழுவில் யாரும் தொல்லியல் துறை நிபுணர்கள் கிடையாது. எனவே எங்கள் கண்டுபிடிப்பை எவரும் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது, நாங்கள் சேகரித்துக் கொண்டு வந்திருக்கும் பொருட்களை பல்வேறு தொல்லியல் துறை நிபுணர்கள் வந்து பார்வையிட்டுவிட்டு, பல்வேறு விதமான ஆச்சரியப்படும் செய்திகளைக் கூறிச் செல்கிறார்கள். அத்துடன் எங்கள் பணியை அங்கீகரித்துப் பாராட்டியும் செல்கிறார்கள். மேலும் மத்திய அமைச்சர் திரு. முரளி மனோகர் ஜோஷி எங்களது ஆராய்ச்சிகளை மனதாரப் பாராட்டியதோடு, வேண்டிய உதவிகளைச் செய்யவும் உறுதியோடு இருக்கிறார். தேசிய அளவில் ஒரு கமிட்டி அமைத்து, மேற்கொண்டு இந்தப் பகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளச் செய்திருக்கிறார்.

எங்களது இந்த முயற்சி வெற்றியடைந்ததில், நாங்கள் மிகவும் உற்சாகமாக உள்ளோம். மேற்கொண்டு, பூம்புகார் மற்றும் தூத்துக்குடி கடல் பகுதிகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இது உத்வேகம் தந்துள்ளது. எங்களிடம் தேவையான கருவிகளும் உபகரணங்களும் இருப்பதால் எங்களது முயற்சியின் மூலம் இந்த தேசத்திற்கு பயனுள்ள பல விஷயங்களைத் தர முடியும் என்று நம்புகிறோம். குறிப்பாக காம்பே வளைகுடாவின் ஒரு இடத்தில், எரிவாயு இருப்பது எங்களது ஆராய்ச்சியில் தெரியவந்தது.

எங்களது இந்த முயற்சிக்குக் கிடைத்திருக்கும் ஆதரவைக் கண்டு இப்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு இந்தியரும் இதை எண்ணி எண்ணிப் பெருமை கொள்ள வேண்டும்.

சந்திப்பு -ஆர்.எஸ். ஸ்ரீராம்

Related articles

Recent articles

spot_img