December 5, 2025, 10:38 PM
26.6 C
Chennai

‘அலைகடலே… அடியேனின் வணக்கம்!’ : பிரதமர் மோடியின் மாமல்லை தமிழ்க் கவிதை!

kovalambeach modi7 - 2025

பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் அண்மையில் கடற்கரையில் அமர்ந்து, மாமல்லை கடல் அழகை ரசித்து, கடற்கரை மணல் வெளியில் நடந்து பயிற்சி செய்து… அது குறித்து ஒரு கவிதை எழுதினார்.

அதன் தமிழ் மொழியாக்கத்தை தற்போது தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டிருக்கிறார். மாமல்லபுரத்தின் அழகை தனது ஊக்கம் பெற்ற கவிதை வரிகளால் பிரதமர் மோடி வெளிப்படுத்தியிருக்கும் அழகு.. இது…!

அலைகடலே!
அடியேனின் வணக்கம்!

அளப்பரிய, முடிவற்ற,
ஒப்பில்லாத வர்ணனைகளைக் கடந்த
நீலக்கடலே
உலகிற்கு உயிரளிக்கும் நீ
பொறுமையின் இலக்கணம்
ஆழத்தின் உறைவிடம்!

அலைகடலே
அடியேனின் வணக்கம்!

வெளித்தோற்றத்திற்கு
கோபமாய் வீரத்துடன்
பேரிரைச்சலோடு எழும் அலைகள்
உன் வலியா? வேதனையா?
துயரமா?
எதன் வெளிப்பாடு?

இருந்த போதிலும்
உன்னை கலக்கமின்றி
தடுமாற்றமின்றி
உறுதியுடன் நிற்கச் செய்கிறது
உன் ஆழம்!

kovalambeach modi5 - 2025

அலைகடலே!
அடியேனின் வணக்கம்!

உன்னிடம் உள்ளது
எல்லையில்லாத வலிமை
முடிவில்லாத சக்தி
ஆனாலும்…
பணிதலின் பெருமையை
நிமிடந்தோறும் நவில்கிறாய்- நீ
கரையைக் கடக்காமல்
கண்ணியத்தை இழக்காமல்!

அலைகடலே!
அடியேனின் வணக்கம்!

கல்வித் தந்தையாய்
ஞான குருவாய்

வாழ்க்கைப் பாடத்தை
போதிக்கிறார் நீ!
புகழுக்கு ஏங்காத
புகலிடத்தை நாடாத
பலனை எதிர் நோக்காத
உன் பயணம் தரும் பாடங்கள் ஏராளம்!

kovalambeach modi6 - 2025

அலைகடலே!
அடியேனின் வணக்கம்!

நிற்காமல் சளைக்காமல்
வீசும் உன் பேரலைகள்
முன்னேறுவதே வாழ்க்கை என்ற
உபதேச மந்திரத்தை உணர்த்தும்
முடிவில்லாத பயணமே
முழுமையான உன் போதனை!

அலைகடலே!
அடியேனின் வணக்கம்!

விழும் அலைகளிலிருந்து
மீண்டும் எழும் அலைகள்
மறைந்து
மீண்டும் துவங்கும் உதயம்
பிறப்பு – இறப்பு என்பது தொடர் வட்டம்
உனக்குள் மடிந்து – பின்
உயிர்த்தெழும் அலைகள்
மறுபிறப்பின் உணர்வூட்டம்

kovalambeach modi4 - 2025

அலைகடலே!
அடியேனின் வணக்கம்!

பழம்பெரும் உறவான
சூரியனால் புடமிட்ட
தன்னையழித்து
விண்ணைத் தொட்டு
கதிரவனை முத்தமிட்டு
மழையாய்ப் பொழிந்து

நீர்நிலைகளாய், சோலைகளாய்
மகிழ்ச்சி மணம் பரப்பி
படைப்பை அலங்கரித்து
எல்லோருக்கும் வாழ்வளிக்கும் நீர் நீ

அலைகடலே!
அடியேனின் வணக்கம்!

வாழ்வின் பேரழகு நீ –
விஷத்தை அடக்கிய
நீலகண்டன் போல் – நீயும்
எது வந்தாலும் ஏற்றுக் கொண்டு
புது வாழ்வைப் பிறர்க்களித்து
சொல்கிறாய்
சிறந்த வாழ்வின்
மறைபொருளை!

அலைகடலே!
அடியேனின் வணக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories