‘அலைகடலே… அடியேனின் வணக்கம்!’ : பிரதமர் மோடியின் மாமல்லை தமிழ்க் கவிதை!

kovalambeach modi7 - 2026

பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் அண்மையில் கடற்கரையில் அமர்ந்து, மாமல்லை கடல் அழகை ரசித்து, கடற்கரை மணல் வெளியில் நடந்து பயிற்சி செய்து… அது குறித்து ஒரு கவிதை எழுதினார்.

அதன் தமிழ் மொழியாக்கத்தை தற்போது தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டிருக்கிறார். மாமல்லபுரத்தின் அழகை தனது ஊக்கம் பெற்ற கவிதை வரிகளால் பிரதமர் மோடி வெளிப்படுத்தியிருக்கும் அழகு.. இது…!

அலைகடலே!
அடியேனின் வணக்கம்!

அளப்பரிய, முடிவற்ற,
ஒப்பில்லாத வர்ணனைகளைக் கடந்த
நீலக்கடலே
உலகிற்கு உயிரளிக்கும் நீ
பொறுமையின் இலக்கணம்
ஆழத்தின் உறைவிடம்!

அலைகடலே
அடியேனின் வணக்கம்!

வெளித்தோற்றத்திற்கு
கோபமாய் வீரத்துடன்
பேரிரைச்சலோடு எழும் அலைகள்
உன் வலியா? வேதனையா?
துயரமா?
எதன் வெளிப்பாடு?

இருந்த போதிலும்
உன்னை கலக்கமின்றி
தடுமாற்றமின்றி
உறுதியுடன் நிற்கச் செய்கிறது
உன் ஆழம்!

kovalambeach modi5 - 2026

அலைகடலே!
அடியேனின் வணக்கம்!

உன்னிடம் உள்ளது
எல்லையில்லாத வலிமை
முடிவில்லாத சக்தி
ஆனாலும்…
பணிதலின் பெருமையை
நிமிடந்தோறும் நவில்கிறாய்- நீ
கரையைக் கடக்காமல்
கண்ணியத்தை இழக்காமல்!

அலைகடலே!
அடியேனின் வணக்கம்!

கல்வித் தந்தையாய்
ஞான குருவாய்

வாழ்க்கைப் பாடத்தை
போதிக்கிறார் நீ!
புகழுக்கு ஏங்காத
புகலிடத்தை நாடாத
பலனை எதிர் நோக்காத
உன் பயணம் தரும் பாடங்கள் ஏராளம்!

kovalambeach modi6 - 2026

அலைகடலே!
அடியேனின் வணக்கம்!

நிற்காமல் சளைக்காமல்
வீசும் உன் பேரலைகள்
முன்னேறுவதே வாழ்க்கை என்ற
உபதேச மந்திரத்தை உணர்த்தும்
முடிவில்லாத பயணமே
முழுமையான உன் போதனை!

அலைகடலே!
அடியேனின் வணக்கம்!

விழும் அலைகளிலிருந்து
மீண்டும் எழும் அலைகள்
மறைந்து
மீண்டும் துவங்கும் உதயம்
பிறப்பு – இறப்பு என்பது தொடர் வட்டம்
உனக்குள் மடிந்து – பின்
உயிர்த்தெழும் அலைகள்
மறுபிறப்பின் உணர்வூட்டம்

kovalambeach modi4 - 2026

அலைகடலே!
அடியேனின் வணக்கம்!

பழம்பெரும் உறவான
சூரியனால் புடமிட்ட
தன்னையழித்து
விண்ணைத் தொட்டு
கதிரவனை முத்தமிட்டு
மழையாய்ப் பொழிந்து

நீர்நிலைகளாய், சோலைகளாய்
மகிழ்ச்சி மணம் பரப்பி
படைப்பை அலங்கரித்து
எல்லோருக்கும் வாழ்வளிக்கும் நீர் நீ

அலைகடலே!
அடியேனின் வணக்கம்!

வாழ்வின் பேரழகு நீ –
விஷத்தை அடக்கிய
நீலகண்டன் போல் – நீயும்
எது வந்தாலும் ஏற்றுக் கொண்டு
புது வாழ்வைப் பிறர்க்களித்து
சொல்கிறாய்
சிறந்த வாழ்வின்
மறைபொருளை!

அலைகடலே!
அடியேனின் வணக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories