மகளிருக்கென்று ஒரு தினம்! மகளிரின்றி ஏது தினம்?

Published:

womensday - 2026

மார்ச் 8: சர்வதேச மகளிர் தினம்
உலகம் கொண்டாடுகிறது…
பெண் என்பவள் பிரம்மாவின் மறு அவதாரம்.
பெண் சிருஷ்டி செய்பவள்.

பூமிக்கு மட்டுமல்ல ஈர்ப்பு சக்தி. பெண்ணிற்கும் உண்டு. அகண்டமான ஆகர்ஷண சக்தியை பூமாதேவிக்குச் சமமாக தன்னில் கொண்டவள் பெண். அவளிடம் தலைவணங்கி, தலைகுனிந்து நின்ற ஆண்களை அனைத்து யுகங்களும் கண்டுள்ளன.

பிரகதாரண்யக உபநிஷத்தில் ஒரு கதை உள்ளது. பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக தன் கையால் மனைவிக்கு அன்னம் சமைத்து அதில் வெண்ணையும் நல்லெண்ணையும் கலந்து கொடுத்தானாம் கணவன். பெண் சிசுவிற்கு சமூகத்தில் எத்தனை வரவேற்பு இருந்தது என்பதை இந்தக் கதை மூலம் அறிய முடிகிறது.

“Wife is the sacred soil where husband can reborn” என்று உண்மையை கணவர்கள் அந்நாளில் நன்கு புரிந்து வைத்திருந்தார்கள் என்று தெரிகிறது.

பெண் என்பவள் புனித மண்!
பெண் என்பவள் மகாசக்தி!
படைக்கும் சக்தி பிரம்மனுக்கு மட்டுமா? பெண்ணிற்கில்லை?
புவியீர்ப்பு பூமிக்கு மட்டுமா? அணங்கிற்கில்லை?

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

அவளா மாயை? அவளிடம் ஈர்க்கப்பட்டு தலைவணங்கி… தலைகுனிந்த அரசர்களும் ஆண்டிகளும் கணக்குண்டா? கேளும்! சரித்திரம் கூறும்.

பெண்ணை அபலை என்று பிரித்துப் பேசி
பழித்துக் கூறும் பேதமையை என்ன சொல்ல?
பெண் எனும் புனித மண்ணில்
கணவன் மீண்டும் மகனாய்ப் பிறக்கிறான்

“ஆத்மாவை புத்திர நாமாசி சஞ்சீவ ஸரதஸ் சதம்!”
கணவனைப் பெற்ற அன்னையும் அவளே ஆகிறாள்.
பின்,
மாமியார் யார்? மருமகள் யார்?
பெண்ணென்னும் மகாசக்தியே
உன்னைப் போற்றி வணங்குகிறேன்!

  • ராஜி ரகுநாதன் ஹைதராபாத்-62
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img