ஒரு நாள் மாசு..!

Published:

diwali-and-crackers
diwali-and-crackers

கவிதை: ஒருநாள் மாசு 
தெலுங்கில்: உஷா துரகா ரேவல்லி.
தமிழில்: ராஜி  ரகுநாதன் 

பிளாஸ்டிக் கவர் எடுத்த ஒவ்வொரு முறையும்..
மோசமான மாசு!

தெரு முனைக்குச் செல்வதற்கு
கார் எடுத்தால் மாசு!

தேவையில்லாமல் மின் விளக்கு…
அணைக்காமல் ஏசி…
நிற்காமல் ஒழுகும் குழாய்…
கண்டுகொள்ளாமல் இருப்பது…
மாசு மாசு மாசு…!

மரம் வெட்டுவதைப் பார்த்தும்
சும்மா இருப்பது …
கின்லே பாட்டில் கீழிறக்காமல்
குடித்து வீசியெறிவது …
ஆபீஸ் பிரிண்டரில் குப்பல் குப்பலாக
பிரிண்ட் அவுட்டுகள்…
அவசரமாக எடுத்தெறியும் டிஷ்யூக்கள் …
டன் கணக்கில் குப்பை…
மைல் தூரத்திற்கு அடைந்த சாக்கடை…
எல்லாம் மாசு… மாசுதான்!

சுற்றுச்சூழல் மீது அக்கறை
ஓர் இரவுக்கே அன்று…
மாசு மீது அக்கறை
ஒரு ஸ்பூன் போதாதே!

பண்டிகைகளுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு…
ஒரு காரணமும் உண்டு…
புரிந்து கொள்ள வேண்டும்!
இல்லாவிடில் …
ஊர், பெயர், இருப்பு இல்லாத
வெற்றுக் காகிதமாகிப் போவோம்!

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

நம் வாழ்வே மாசு…
நம் பழக்கங்களே பூமிக்கு சாபம்…!

சுற்றுச்சூழல் மீது அக்கறை இருந்தால்
ஒவ்வொரு நாளும் …
ஒவ்வொரு கணமும்
விழிப்பு நம்முள் தலை தூக்கியிருக்கும்!

கொஞ்சமாவது ரோஷம் இருந்திருந்தால்
நம் இருப்பை சரியாக
அடையாளம் காண்போம்…
பாதுகாத்துக் கொள்வோம்!

பண்டிகை கொண்டாடாவிட்டால்
விட்டு விடுங்கள்…
அது அவரவர் இஷ்டம்!
அதற்கு காரணம் கூறுவது
மிகப் பெரும் நஷ்டம்!

கையாலாகாத விட்டேத்தியான வாழ்வுக்கு
கோழைத்தன மனசுக்கு
எந்த மாசானால் தான் என்ன?

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img