ஆன்மிகக் கவிதைகள்: காத்திடு முருகா! அரோகரா அரோகரா!

deepavali-murugan
deepavali-murugan

ஆறுமுகனின் புகழ் பாடியே இன்புறுவோம் !
கந்தனின் நாமம் ஒன்றே நம் ஆயுள் காப்பீடு!
கவிதைகள் : கமலா முரளி

அரோகரா ! அரோகரா !

முத்துக்குமரன் நம்
                  நெற்றியைக் காக்க !
கந்தவேலன்  நம்
                   கண்களைக் காக்க !
முக்கண்ணன் மகன் நம்
                மூக்கினைக் காக்க !
நூபுர கிண்கிணி நாதன் நம்
                  நுரையிரல் காக்க !
இடும்பாயுதன் நமை
        இருமலிலிருந்து காக்க !
மருதமலை முருகா
          மூச்சுதிணறலில் இருந்து காக்க !
கதிர்வேலன் நமை
          கடும் நோயிலிருந்து காக்க !
வெற்றிவேல் வித்தகன் நமை
           வைரஸிலிருந்து  காக்க !
கோழிக்கொடியோன்
               கொரானாவிலிருந்து காக்க !
கந்தவேல் முருகனுக்கு
                அரோகரா ! அரோகரா !

murugan krauncha malai
murugan krauncha malai

சண்முகா சரணம் !

கஜானன் கால் பணிந்து
கமலப் பெண் படிக்கும்
கந்தனின் கவசம் இது !

கலைமகளை தொழுது
கந்தன் புகழ் பாடிடுவேன் !

வடபழனி ஆண்டவனே !
இடர்கள் தீர்த்திடுவாய் !

வள்ளி மணாளனே ! செல்வம்
அள்ளி அருளிடுவாய் !

நம்பித் துதிப்போர்க்கு
நல்லருள் வழங்கிடுவாய் !

வெம்பி வதங்கிடாமல்
விரைந்தே வந்திடுவாய் !

முன்னின்று காத்திடப்பா !
முப்போதும் காத்திடப்பா !

சிரசாம் தலைதனை
    சிக்கல் சிங்காரவேலன் காக்க !

நெற்றி, புருவத்தை
    நெற்றிக்கண்ணன் மகன் காக்க!

கண்களை, காதுகளை
    கந்தகோட்ட வேலவன் காக்க !

மூக்கினை, நாசித் துவாரங்களை
    முத்துக்குமரன் காக்க !

வாய், இதழ்கள், பற்களையும்
    வல்லக்கோட்டை முருகன் காக்க

தொண்டை, சுவாசக் குழல் தனை
    தொண்டைநாட்டு
                  தணிகைவேல் காக்க!

மார்பையும் இதயம், நுரையீரலை
       மருதமலை முருகன் காக்க !

வயிற்றையும், உதரத்தையும்
      வள்ளி மணாளன் காக்க !

கைகளையும் , கால்களையும்
       கங்காதரன் புதல்வன் காக்க !

ஆண், பெண் இலச்சினைகள்
    ஆனைமுகத்தோன் தம்பி காக்க

உள்ளுறுப்புகள், சுரப்பிகளை
      உமைமைந்தன் காக்க  !

சித்த சுத்தியை சிவசுப்பிரமணியனே நீ தந்திடுவாய் !

கிருமிகளில் இருந்து
கார்த்திகை பாலா நீ
காத்திடுவாய் !

நோய் எதிர்ப்புச் சக்தியை
நூபரமணிந்த பாலசுப்ரமணியா
நீ தந்திடுவாய் !

போற்றுகிறோம் !
போற்றுகிறோம் ! கந்தா உனைப்
போற்றுகிறோம் !

எல்லாத் தொழிலும் சிறக்கச் செய்வாய்
எட்டு குடியில் வாழ் எம் தலைவா !

இயல்பாய் வாழ்க்கை இயங்கிட வைப்பாய்
இமவான் மகள் பெற்ற இளங்குமரா !

பணிந்திட்டோம் உன் பாதம் !
பக்கமிருந்து காத்திடுவாய் !

சரணமடைந்திட்டோம் !
சங்கடம் தீர்த்து ஆட்கொள்வாய் !

சரணம் ! சரணம் !
கோவே சரணம் !
சரணம் சரணம் !
சண்முகா சரணம் !

2 COMMENTS

  1. அருமை கமலா முரளி அவர்களே, சூலமங்கலம் சகோதரிகள் குரலில் படித்துப்பார்த்தேன் அருமையாகப் பொருந்தி வருகிறது.

  2. அருமை நட்பே, கோயிலுக்கு செல்ல முடியாத இக்காலத்தில் வீட்டிலிருந்தே முருகன் நாமத்தை நமஸ்கறிக்க செய்தமைக்கு…வாழ்த்துக்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories