ஆறுமுகனின் புகழ் பாடியே இன்புறுவோம் !
கந்தனின் நாமம் ஒன்றே நம் ஆயுள் காப்பீடு!
கவிதைகள் : கமலா முரளி
அரோகரா ! அரோகரா !
முத்துக்குமரன் நம்
நெற்றியைக் காக்க !
கந்தவேலன் நம்
கண்களைக் காக்க !
முக்கண்ணன் மகன் நம்
மூக்கினைக் காக்க !
நூபுர கிண்கிணி நாதன் நம்
நுரையிரல் காக்க !
இடும்பாயுதன் நமை
இருமலிலிருந்து காக்க !
மருதமலை முருகா
மூச்சுதிணறலில் இருந்து காக்க !
கதிர்வேலன் நமை
கடும் நோயிலிருந்து காக்க !
வெற்றிவேல் வித்தகன் நமை
வைரஸிலிருந்து காக்க !
கோழிக்கொடியோன்
கொரானாவிலிருந்து காக்க !
கந்தவேல் முருகனுக்கு
அரோகரா ! அரோகரா !
சண்முகா சரணம் !
கஜானன் கால் பணிந்து
கமலப் பெண் படிக்கும்
கந்தனின் கவசம் இது !
கலைமகளை தொழுது
கந்தன் புகழ் பாடிடுவேன் !
வடபழனி ஆண்டவனே !
இடர்கள் தீர்த்திடுவாய் !
வள்ளி மணாளனே ! செல்வம்
அள்ளி அருளிடுவாய் !
நம்பித் துதிப்போர்க்கு
நல்லருள் வழங்கிடுவாய் !
வெம்பி வதங்கிடாமல்
விரைந்தே வந்திடுவாய் !
முன்னின்று காத்திடப்பா !
முப்போதும் காத்திடப்பா !
சிரசாம் தலைதனை
சிக்கல் சிங்காரவேலன் காக்க !
நெற்றி, புருவத்தை
நெற்றிக்கண்ணன் மகன் காக்க!
கண்களை, காதுகளை
கந்தகோட்ட வேலவன் காக்க !
மூக்கினை, நாசித் துவாரங்களை
முத்துக்குமரன் காக்க !
வாய், இதழ்கள், பற்களையும்
வல்லக்கோட்டை முருகன் காக்க
தொண்டை, சுவாசக் குழல் தனை
தொண்டைநாட்டு
தணிகைவேல் காக்க!
மார்பையும் இதயம், நுரையீரலை
மருதமலை முருகன் காக்க !
வயிற்றையும், உதரத்தையும்
வள்ளி மணாளன் காக்க !
கைகளையும் , கால்களையும்
கங்காதரன் புதல்வன் காக்க !
ஆண், பெண் இலச்சினைகள்
ஆனைமுகத்தோன் தம்பி காக்க
உள்ளுறுப்புகள், சுரப்பிகளை
உமைமைந்தன் காக்க !
சித்த சுத்தியை சிவசுப்பிரமணியனே நீ தந்திடுவாய் !
கிருமிகளில் இருந்து
கார்த்திகை பாலா நீ
காத்திடுவாய் !
நோய் எதிர்ப்புச் சக்தியை
நூபரமணிந்த பாலசுப்ரமணியா
நீ தந்திடுவாய் !
போற்றுகிறோம் !
போற்றுகிறோம் ! கந்தா உனைப்
போற்றுகிறோம் !
எல்லாத் தொழிலும் சிறக்கச் செய்வாய்
எட்டு குடியில் வாழ் எம் தலைவா !
இயல்பாய் வாழ்க்கை இயங்கிட வைப்பாய்
இமவான் மகள் பெற்ற இளங்குமரா !
பணிந்திட்டோம் உன் பாதம் !
பக்கமிருந்து காத்திடுவாய் !
சரணமடைந்திட்டோம் !
சங்கடம் தீர்த்து ஆட்கொள்வாய் !
சரணம் ! சரணம் !
கோவே சரணம் !
சரணம் சரணம் !
சண்முகா சரணம் !
à®…à®°à¯à®®à¯ˆ கமலா à®®à¯à®°à®³à®¿ அவரà¯à®•à®³à¯‡, சூலமஙà¯à®•à®²à®®à¯ சகோதரிகள௠கà¯à®°à®²à®¿à®²à¯ படிதà¯à®¤à¯à®ªà¯à®ªà®¾à®°à¯à®¤à¯à®¤à¯‡à®©à¯ à®…à®°à¯à®®à¯ˆà®¯à®¾à®•à®ªà¯ பொரà¯à®¨à¯à®¤à®¿ வரà¯à®•à®¿à®±à®¤à¯.
à®…à®°à¯à®®à¯ˆ நடà¯à®ªà¯‡, கோயிலà¯à®•à¯à®•à¯ செலà¯à®² à®®à¯à®Ÿà®¿à®¯à®¾à®¤ இகà¯à®•à®¾à®²à®¤à¯à®¤à®¿à®²à¯ வீடà¯à®Ÿà®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯‡ à®®à¯à®°à¯à®•à®©à¯ நாமதà¯à®¤à¯ˆ நமஸà¯à®•à®±à®¿à®•à¯à®• செயà¯à®¤à®®à¯ˆà®•à¯à®•à¯…வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•à®³à¯ .