பிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல… அவர்களை அதிகமாக நினைப்பதற்கே..! உணர்வின் உச்சத்தில் உயிர்த்தெழுந்த வார்த்தைகள்! உன்னிடம் இன்று பேசக்கூடாது! உன்முகம் இன்று பார்க்கக்கூடாது! உன்குரல் இன்று கேட்கக்கூடாது! உன்நிழல் இன்று படக்கூடாது! தீர்மானத்தின் சத்தியத்தை தீர்க்கமாய்க் காத்துவிட்டேன்! ஆனால்… உன்னையே அன்று முழுதும் நினைத்தபடி இருந்த மனசை கட்டுப்படுத்தத் தவறிவிட்டேன்! அட… ஆமாம்! பிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல… அவர்களை அதிகமாக நினைப்பதற்கே..!
மறக்கவோ..? நினைக்கவோ..?
Popular Categories