உன் ஒவ்வொரு அசைவுகளையும் ரசித்துப் புதைத்தேன்! என் மனம் புதைகுழியாய்ப் போனது! நினைவுகள் மட்டுமே மீட்புப் பணியில்! அச்சென்ற தும்மல்… அசைந்தாடும் கம்மல்… சுவாசத்தின் சிக்கனத்தால் பலவீனமாய் வெளிக்கிளம்பும் இருமல் காற்று! மூக்குத்திப் பூவின் ஓரத்தில் பட்டு எதிரொளிக்கும் வெளிச்சக் கீற்று! எல்லாம் ரசனைக்குரியவை! ஆசையுடன் மனதில் மோதும்… ஆனந்த எண்ணம்! அந்தக் கணம் நீ தும்முகின்ற போதும்… எனக்கு அது ஆசியளிக்கும் ஆமோதிப்பு! உன்னருகே நானிருந்தும்… உன்னையே நினைத்திருந்தும்… உனக்கு விக்கல் எடுத்து விழி பிதுங்கும்! எனக்கோ திக்கல் திணறல் மூளை குழம்பும்! ஓ… நிமித்தங்கள் எல்லாம் நேசத்துக்கு உட்பட்டவையோ?
Published:

