பள்ளிக்கூட வகுப்பறை! வாய்பிளந்து அமர்ந்திருந்தாலும் வாத்தியாரின் வார்த்தை மட்டும் மூளையை முழுதாய் எட்டவில்லை! கவனச் சிதறல்.. கல்லூரிக் காலம்..! பேராசிரியர் போராசிரியராய் மாறிப்போன மர்மம்! ஏழு மலைகளும் ஏழு கடல்களும் தாண்டி நீளும் எண்ண அலைகள்! எங்கோ ஒரு குன்றின் உச்சியில் கோட்டைக்குள் இருக்கும் கூண்டு! அதனுள்ளே வாசம் செய்யும் கிளி! ஏனோ என் உயிர் கிளியின் நெஞ்சில் ஊசலாடுவதாய்… எல்லாம் கவனச் சிதறல்! தியானம் செய் – என்று ஒருவர்.. மனதை ஒருமுகப் படுத்து – என்று ஒருவர்… இதோ இதைமட்டும் யோசி – என்று ஒருவர்…! கடவுள் கதைகள் ஆயிரம் சொல்லி கருத்தைச் செலுத்த கட்டளைகள்… கற்பனைக்குள் அடங்காத மனம் மட்டும் கட்டுப்படாமல் சுற்றித் திரிந்த மர்மம்!
Published:

