December 6, 2025, 12:14 AM
26 C
Chennai

வெற்றித் திருநாள் விஜயதசமி

vijayadasami-kavithai வழிபடு வழிபடு வெற்றியை வழிபடு நித்தமும் வழிபடு சக்தியை வழிபடு வெற்றியைத் தந்திடும் விஜய தசமியில் சற்றே நினைந்திடு சக்தியின் வெற்றியை! ஒருமுக மனதாய் ஒன்பது இரவுகள் திருமகள் கலைமகள் மலைமகள் வணங்கி முப்பெரும் சக்தியை முழுதாய் உணர்ந்தோம் அப்பெரும் சக்தியே வெற்றியைத் தந்திடும்! செய்யும் தொழிலே தெய்வம் என்றிடும் மெய்யன் பர்பல் லாயிரம் இங்கே ஆயுள் முழுதும் சோறிடும் தொழிலை பயபக் தியுடன் வணங்குவர் இந்நாள்! வெற்றிக் கனியைத் தந்திடும் கதைகள் பாரத பூமியில் பலப்பல உண்டு அதிலும் குறிப்பாய் வெற்றியைப் பெறுவது வெற்றித் திருநாள் விஜய தசமியில்! மாபா ரதமும் ராமா யணமும் பாமர னுக்கும் பாடம் சொல்லும் இவ்விரு கதையிலும் வெற்றியை பெறுவது வெற்றித் திருநாள் விஜய தசமியில்! பெண்ணெனும் சக்தியே வெற்றியின் உருவெனும் உண்மையை உணரா மாந்தர் அரக்கர் மண்ணும் பெண்ணும் மகிழ்ச்சிக் குரிதாய் எண்ணிய அனைவரும் வீழ்ந்தழிந் தொழிந்தார் பத்துத் தலைகள் படைத்த ராவணன் செத்துப் போகவே சீதையைக் கொணர்ந்தான் வெற்றித் திருநாள் விஜய தசமியில் பத்துத் தலையையும் கொய்தனன் ராமன்! அண்ணன் செய்தான் அரும்பெருந் தவறு மண்ணை இழந்தான் மனிதம் இழந்தான் தன்னை இழந்தான் தம்பியர் இழந்தான் ஆண்மை கெடவே அனைத்தும் இழந்தான் தன்னைச் சேர்ந்த பொருளாய் எண்ணி பெண்ணையும் இழந்தான் பெருந்தவ றிழைத்தான் பெண்ணைப் பொருளாய் எண்ணிய தவறால் தண்டனை பன்னிரண் டாண்டுகள் பெற்றான் அஞ்ஞாத வாசமாய் ஓர்வரு டம்தனை பாண்டவர் ஐவரும் அடிமையில் கழித்தனர் ஆண்மையை இழந்து அலிவே டத்தில் மாண்டவன் போலே அர்ச்சுனன் வாழ்ந்தனன் நற்தவம் செய்தே சக்தியை வேண்டி பெற்றனன் மீண்டும் வெற்றியின் சக்தி! வெற்றித் திருநாள் விஜய தசமியில் வில்லினை மீட்டான் விஜயன் ஆனான்! பக்திப் பெருக்கால் நாம்கேட் டிருக்கும் இக்கதை கூறிடும் நீதியும் என்ன? கருமதி அறிவும் நிறைமதி போலே ஓங்கச் செய்வது சக்தியின் அருளே! வெற்றித் திருநாள் விஜய தசமியில் வெற்றியைக் கண்டனர் வேலையைத் தொடங்கி! ஐயமும் நீங்கியே அவ்வழி ஏற்று நயமுடன் வெற்றியை நாமும் பெறுவோம்! தோல்வியே படிகள் துயர்களே ஏணி வெல்வதே வாழ்வின் லட்சியம் கொண்டோம் வெற்றித் திருநாள் விஜய தசமியில் வெற்றியெனும் விரதம் பூணுவோம் வேங்கையரே! (14 வருடம் முன்பு எழுதிய கவிக் கிறுக்கல்! 14 வருட வனவாசம் முடிந்து இப்போது வான்வசம் வந்திருக்கிறது!  முதிர்ச்சியற்ற மொழிநடை; ஆனாலும் சிறு வயதில் என் சிந்தனை அப்போது எப்படி இருந்தது என்பதை வெளிக்காட்ட… இங்கே மறு வாசிப்பு)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories