கம்பனைப் பாடுவேன்!

kamban poem - 2026
பள்ளிப் பருவத்தில் கவிதை என்ற பெயரில் கிறுக்கியதை எல்லாம் இப்போது எடுத்துப் படித்தால்… சிரிப்புத்தான் வருகிறது. அன்றைய அறிவுத் திறன் அப்படி.! தவறுகள் செய்து திருத்திக் கொண்டு பின்னர்தானே ஒரு பக்குவ நிலை அடையும் எழுத்தும்! வாழ்க்கையும்!
இப்படித்தான் எழுத்துத் துறைக்கு வந்த புதிதில் எழுதிய எழுத்துகள் எல்லாம் கால மாற்றத்தில் உற்று நோக்கின், அதன் வெகுளித்தனமும் குழந்தைத்தனமும் புலப்படும்.
இந்தக் கவிதையும் அப்படித்தான் தோன்றுகிறது. 12 வருடங்களுக்கு முன்னர்… நண்பர் ஒருவருடன் காஞ்சி கம்பன் கழக நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றிருந்தேன். திடீரென நிகழ்ச்சியின் முடிவில் ஏதாவது கவிதை வாசியேன் என்றார் நண்பர். அடுத்த அரை மணியில் ஏதோ கிறுக்கி, கம்பனைக் குறித்த ஒரு கவிதையை வாசித்தேன். 

இதில் உள்ள முதிர்ச்சியற்ற தன்மை இப்போது எனக்குப் புரிகிறது… இருந்தாலும் நம் அறியாமையை இப்போதும் எண்ணிப் பார்த்தால்… ம்ம்ம்… ஒரு சுவாரஸ்யம்தான்!!!


கம்பனைப் பாடுவேன்!

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

கம்பநாட் டாரே கவிதயின் வேந்தே
எம்மவர் எளியவர் எவருமே போற்றும்
பாரதப் புகழைப் பறைசாற் றிடும்ஓர்
வீரத் திருமகன் வீரிய வித்தகன்
பார்முழு தேத்தும் பாரதப் புதல்வன்
பார்ப்பதற் கெளியன் பரதனின் தமயன்
எம்குல இறைவன் ராமனின்
வாழ்வை வளமாய் வழங்கிய தேவே!

வெண்ணெய் நல்லூர் வள்ளல் தயவால்
மண்ணது சிலிர்க்கும் மகிமைக் கதையால்
தெய்வத் தீந்தமிழ் தேனாய்ப் பாய்ந்திட
உய்வு பெற்றே உயர்ந்ததும் தமிழே!
கலைமகள் அருளைக் கவிவழி பெற்றே
சிலைபோல் சமைந்த சிறியரும் தமிழ்க்கவித்
திறத்தில் சிறந்து தழைக்க
சரஸ்வதி அந்தாதி தந்த தேவே!

கம்பன் என்றால் கற்பனைக் களஞ்சியம்
நம்போல் பலரும் நவில்வது கேளீர்
முப்பெரும் வேந்தரும் முழுதாய் விரும்பும்
ஒப்பிலா வித்தகர் ஒளிர்வது கவியில்!
அன்றலர் மலர்க்கு அண்ணல் விழிதனை
சொன்னதே போதும் சோற்றுக் கொருபதம்
காவிரிப் பெருக்கு அடங்க
பாவிரித் தருளிப் பாடிய தேவே!

ராமனின் கதையை ரங்க நாதனின்
தாமரை விழியாள் சந்நிதி முன்னே
அரங்கேற் றிடும்முன் அற்புதக் கவியாய்
அரவில் துயிலும் அரங்கன் சொல்லால்
நம்மாழ் வாரை நயமுடன் போற்றி
அம்பாய் வந்தது அந்தா தியுமே!
கம்பநின் ராம பக்தியில்
எம்மவர்க் கொருதுளி தந்திடும் தேவே!!
========================================
இதுவும் 2001ம் ஆண்டு டைரியில் எழுதிவைத்ததுதான்!

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories