கம்பனைப் பாடுவேன்!

kamban poem - 2026
பள்ளிப் பருவத்தில் கவிதை என்ற பெயரில் கிறுக்கியதை எல்லாம் இப்போது எடுத்துப் படித்தால்… சிரிப்புத்தான் வருகிறது. அன்றைய அறிவுத் திறன் அப்படி.! தவறுகள் செய்து திருத்திக் கொண்டு பின்னர்தானே ஒரு பக்குவ நிலை அடையும் எழுத்தும்! வாழ்க்கையும்!
இப்படித்தான் எழுத்துத் துறைக்கு வந்த புதிதில் எழுதிய எழுத்துகள் எல்லாம் கால மாற்றத்தில் உற்று நோக்கின், அதன் வெகுளித்தனமும் குழந்தைத்தனமும் புலப்படும்.
இந்தக் கவிதையும் அப்படித்தான் தோன்றுகிறது. 12 வருடங்களுக்கு முன்னர்… நண்பர் ஒருவருடன் காஞ்சி கம்பன் கழக நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றிருந்தேன். திடீரென நிகழ்ச்சியின் முடிவில் ஏதாவது கவிதை வாசியேன் என்றார் நண்பர். அடுத்த அரை மணியில் ஏதோ கிறுக்கி, கம்பனைக் குறித்த ஒரு கவிதையை வாசித்தேன். 

இதில் உள்ள முதிர்ச்சியற்ற தன்மை இப்போது எனக்குப் புரிகிறது… இருந்தாலும் நம் அறியாமையை இப்போதும் எண்ணிப் பார்த்தால்… ம்ம்ம்… ஒரு சுவாரஸ்யம்தான்!!!


கம்பனைப் பாடுவேன்!


கம்பநாட் டாரே கவிதயின் வேந்தே
எம்மவர் எளியவர் எவருமே போற்றும்
பாரதப் புகழைப் பறைசாற் றிடும்ஓர்
வீரத் திருமகன் வீரிய வித்தகன்
பார்முழு தேத்தும் பாரதப் புதல்வன்
பார்ப்பதற் கெளியன் பரதனின் தமயன்
எம்குல இறைவன் ராமனின்
வாழ்வை வளமாய் வழங்கிய தேவே!

வெண்ணெய் நல்லூர் வள்ளல் தயவால்
மண்ணது சிலிர்க்கும் மகிமைக் கதையால்
தெய்வத் தீந்தமிழ் தேனாய்ப் பாய்ந்திட
உய்வு பெற்றே உயர்ந்ததும் தமிழே!
கலைமகள் அருளைக் கவிவழி பெற்றே
சிலைபோல் சமைந்த சிறியரும் தமிழ்க்கவித்
திறத்தில் சிறந்து தழைக்க
சரஸ்வதி அந்தாதி தந்த தேவே!

கம்பன் என்றால் கற்பனைக் களஞ்சியம்
நம்போல் பலரும் நவில்வது கேளீர்
முப்பெரும் வேந்தரும் முழுதாய் விரும்பும்
ஒப்பிலா வித்தகர் ஒளிர்வது கவியில்!
அன்றலர் மலர்க்கு அண்ணல் விழிதனை
சொன்னதே போதும் சோற்றுக் கொருபதம்
காவிரிப் பெருக்கு அடங்க
பாவிரித் தருளிப் பாடிய தேவே!

ராமனின் கதையை ரங்க நாதனின்
தாமரை விழியாள் சந்நிதி முன்னே
அரங்கேற் றிடும்முன் அற்புதக் கவியாய்
அரவில் துயிலும் அரங்கன் சொல்லால்
நம்மாழ் வாரை நயமுடன் போற்றி
அம்பாய் வந்தது அந்தா தியுமே!
கம்பநின் ராம பக்தியில்
எம்மவர்க் கொருதுளி தந்திடும் தேவே!!
========================================
இதுவும் 2001ம் ஆண்டு டைரியில் எழுதிவைத்ததுதான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories