தமிழ் ’நாட்டு’ கூமுட்டை அரசியல்வாதிகளுக்கு… ரஜினி ‘பொளேர்’..!

rajini - 2026நாடு முழுதும் ஒரு குரலில் பேசிக் கொண்டிருக்க, தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மட்டும், தேச விரோத பேச்சுகளை அவிழ்த்துக் கொண்டிருக்க, தன் மீதான விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் ரஜினி இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, தக்க பதிலடி கொடுத்தார். இங்குள்ள அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள் என்பதை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் ராஜ தந்திரத்துடன் கையாண்டுள்ளனர். எனவே தான் அவர்களை கிருஷ்ணர், அர்ஜுனன் போன்றவர்கள் என்றேன்.

காஷ்மீர் விஷயம் என்பது இந்த நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட ஒன்று. காஷ்மீர் தான் பயங்கரவாதிகளுக்கு தாய் வீடாக இருந்துள்ளது. அவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவிவதற்கு அது கேட்வே ஆப் இந்தியா என்பது போல் இருக்கிறது. அதை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று மிகவும் சிரமப்பட்டு ஒரு நடவடிக்கையை எடுத்து இருக்கிறார்கள்!

rajinikanth - 2026ஒரு அருமையான ராஜதந்திரமாக முதலில் 144 தடை உத்தரவு பிறப்பித்து, எவரெல்லாம் பிரச்னைகள் செய்கிறார்களோ அவர்களை எல்லாம் வீட்டுக்குள் தடுத்து வைத்து, அரசு என்ன செய்கிறது என்று யாருக்கும் தெரியாத படி, மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் முதலில் அங்கே இந்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றி, அதன் பிறகு மக்களவைக்கு கொண்டு வந்து சட்டமாக்கி, அதனை ராஜதந்திரமாக நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இது முழுக்க முழுக்க ஒரு நல்ல ராஜதந்திர நடவடிக்கை. ஆனால் அதை விவாதப் பொருளாக்கி, அதை அவர்கள் தெரிந்து கொண்டு, இது தொடர்பாக முழித்துக் கொண்டு…  இதை நிச்சயமாக செய்துவிட அவர்கள் விட்டிருக்க மாட்டார்கள் !

தயவுசெய்து நம் அரசியல்வாதிகளுக்கு எதை அரசியல் ஆக்க வேண்டும் என்று தெரிய வேண்டும் இது நம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது. பாதுகாப்பு தொடர்பான பிரச்னை என்பதற்காகத்தான் நான் அவ்வாறு சொன்னேன்!

எதை அரசியல் ஆக்க வேண்டும் எதை அரசியலாக்கக் கூடாது என்பதை மதிப்புக்குரிய சில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்! என்றார் ரஜினிகாந்த்.

அவரிடம், போயஸ் தோட்டம் அரசியல் களத்தின் மையமாகுமா என்று கேள்வி கேட்டனர். அதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்தார் ரஜினி காந்த்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories