அலர்ட்..! சந்தேகப் படும் நபர்கள் கண்ணில் பட்டால் தகவல் கொடுங்க..!

security tighten - 2026
file picture:

இலங்கை குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு மத்திய உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது. இதை அடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப் படுத்தும் படி, மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், தமிழகம் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.!

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான படகுகளை கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு முதலே அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

dgp tripati - 2026இந்நிலையில் தமிழகத்தில் ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகள் 6 பேரும் கோவை பகுதிகளில் பதுங்கியிருக்கின்றனர் என்று தகவல் வெளியானது. இதனால் கோவையில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.

கோவை மாநகரில் பொது இடங்கள், விமான நிலையம், ரயில் நிலையம், முக்கிய பேருந்து நிலையங்கள் உள்பட பதற்றமான இடங்களில் போலீசார் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து மாறுவேடத்தில் ஊடுருவி உள்ளதாகக் கூறப் படுகிறது. இலங்கையைச் சேர்ந்த 5 பேர் மீதம் உள்ளவர்கள் என்று உளவுத் துறை கூறியுள்ளது.

இதை அடுத்து, பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் நபர்களில் 3 பேரின் படங்களை கோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு சந்தேகம் ஏற்படும் படி யாரேனும் இருந்தால் உடனடியாக எண் 100-ஐ அழைத்து தகவல் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு காவல் உயர் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், புகைப்படத்தில் உள்ள நபர்களைக் கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories