அலர்ட்..! சந்தேகப் படும் நபர்கள் கண்ணில் பட்டால் தகவல் கொடுங்க..!

security tighten - 2026
file picture:

இலங்கை குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு மத்திய உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது. இதை அடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப் படுத்தும் படி, மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், தமிழகம் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.!

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான படகுகளை கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு முதலே அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

dgp tripati - 2026இந்நிலையில் தமிழகத்தில் ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகள் 6 பேரும் கோவை பகுதிகளில் பதுங்கியிருக்கின்றனர் என்று தகவல் வெளியானது. இதனால் கோவையில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.

கோவை மாநகரில் பொது இடங்கள், விமான நிலையம், ரயில் நிலையம், முக்கிய பேருந்து நிலையங்கள் உள்பட பதற்றமான இடங்களில் போலீசார் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து மாறுவேடத்தில் ஊடுருவி உள்ளதாகக் கூறப் படுகிறது. இலங்கையைச் சேர்ந்த 5 பேர் மீதம் உள்ளவர்கள் என்று உளவுத் துறை கூறியுள்ளது.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

இதை அடுத்து, பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் நபர்களில் 3 பேரின் படங்களை கோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு சந்தேகம் ஏற்படும் படி யாரேனும் இருந்தால் உடனடியாக எண் 100-ஐ அழைத்து தகவல் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு காவல் உயர் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், புகைப்படத்தில் உள்ள நபர்களைக் கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories