ஸ்டாலினின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்கத் தூண்டியுள்ளது: சி.பி.ராதாகிருஷ்ணன்

Published:

cpradhakrishnan - 2026

கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார் என திருப்பூரில் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

மேலும், மு.க.ஸ்டாலினின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தியுள்ளது என தெரிவித்தார் பாஜக.,வின் மூத்த தலைவர்களின் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன்.

இதனிடையே, இவரது பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக பொறுத்தார் பூமி ஆள்வார், நாம் பொறுத்து கொண்டுள்ளோம் என்றும், பாஜகவை நாங்கள் தோற்கடிக்கவில்லை, மக்கள் தான் தோற்கடித்தனர் என்றும், திருப்பூர் நிர்வாகி இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பேசினார்.

மேலும், சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் முதலீடு செய்தது என்று கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின் முதலீட்டாளர்கள் தமிழகம் வந்தால் திமுகவுக்கு மகிழ்ச்சிதான் என்று கூறியுள்ளார்.

stalin - 2026

ஆனால் சி.பி. ராதகிருஷ்ணன் பேச்சுக்கு பாஜக அனுதாபிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி என்ற ஒரு மனிதரை எதிர்த்தே அரசியல் செய்ய முடியாமல் முடங்கிப் போயிருக்கும் ஸ்டாலின், தங்களை தோற்கடித்ததாக சிபிஆர் சொல்வது வேதனை என்று கூறுகின்றனர்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

சிலரோ, சிபிஆர் பொடி வைத்துப் பேசியிருக்கிறார். கருணாநிதி சொன்ன பொய்களை தமிழகம் நம்பியது, அதனால் பொய்களை வைத்தே கருணாநிதி வெற்றி பெற்று வந்தார். அதே பொய்களை வைத்து, இப்போது கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார் என்று சிபிஆர் நக்கல் செய்துள்ளார் என்றும், இந்த அளவுக்கு பொய்களைக் கூறி ஸ்டாலின் வெற்றி பெற முடியுமானால், அவற்றை முறியடிக்க நாங்கள் இன்னும் அதிகம் கடின உழைப்பைச் செய்தாக வேண்டும் என்பதை எங்களுக்கு உணர்த்துகிறது என்று சிபிஆர் கூறுவதாக சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img