விளையாட்டை ரசித்திருந்த சிறுமி! 14 அடி உயரத்திலிருந்து விழுந்த அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ!

galary - 2026

சாவ்பாவ்லோ: கால்பந்து மைதானத்தில் போட்டியை பார்த்து கொண்டிருந்த சிறுமி, 40 அடி உயரம் கொண்ட கேலரியிலிருந்து தவறி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில் கால்பந்து மைதானம் ஒன்று உள்ளது. அந்த மைதானத்தில் சாவ் பாலே, ஜெரிமோ ஆகிய அணிகள் மோதின. சாவ்பாலோ அணிக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு எக்கச்சக்கம். எனவே, இரு அணிகளின் ஆட்டத்திலும் அனல் பறந்தது. வீரர்கள் விளையாடி கொண்டிருந்தனர். பரபரப்பாக நடைபெற்று கொண்டிருந்த இந்த போட்டியில் கால்பந்து வீரர்களை ரசிகர்கள் உற்சாகப்படுத்தி கொண்டிருந்தனர்.

அப்போது மைதானத்தில் 40 அடி உயரத்திலிருந்த கேலரியின் தடுப்புக்கு அருகில் 13 வயது சிறுமி ஒருவர் உற்சாகமாக ஆடியபடியே விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென யாரும் எதிர்பார்க்காத அந்த சம்பவம் நிகழ்ந்தது.

அந்த சிறுமி கால் தவறி கீழே, அதுவும் தலைகீழாக விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுமியை உடனே சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

சோதனையில், 40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த அந்த சிறுமி அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பி உள்ளார். பெரிய காயங்கள் எதுவும் இல்லை. உயிருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அந்த சிறுமி யார் என்ன என்ற விவரம் தெரியவில்லை. அவருடன் வந்தவர்கள் யார் என்ற விவரமும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை. இது குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories