December 6, 2025, 1:18 AM
26 C
Chennai

சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதிய திட்டம்; பிரதமர் மோடி அதிரடி.!

MODI - 2025

சிறு வியாபாரிகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 7-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெறும் விழாவில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

வியாபாரிகளுக்கு பென்சன் வழங்கும் திட்டம்- பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய மோடி பல்வேறு அதிரடி திட்டங்களை கொண்டு வந்தார்.

முதல் மந்திரிசபை கூட்டத்தில் விவசாயிகள், சிறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் புதிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவி தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இதன் மூலம் 15 கோடி விவசாயிகள் பலன் அடைவார்கள்.

மேலும் பிரதான் மந்திரி கிசான் மான்தன் யோஜனா திட்டமும் கொண்டு வரப்பட்டது.

MANI 2 - 2025

அதன்படி 60 வயதான தகுதியுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தை கடந்த மாதம் மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் தொடங்கி வைத்தார்.

இதே போல சிறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தது.

“பிரதான் மந்திரி லகு வியாபாரி மான்-தன் யோஜனா” என்று அந்த திட்டம் அழைக்கப்படுகிறது.

RUBA - 2025

இந்த திட்டம் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதியில் இருந்து கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் கடைக்காரர்கள், சில்லரை வியாபாரிகள், சுய தொழில் செய்பவர்கள் பயன் பெறுவார்கள்.

ஜி.எஸ்.டி.யில் ஆண்டுக்கு ரூ.1½ கோடிக்கு கீழ் வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்துள்ள வியாபாரிகள் இதில் பயன்பெற முடியும்.

18 வயது முதல் 40 வயது வரை உள்ள வியாபாரிகள் இந்த திட்டத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து இருக்க வேண்டும்.

அப்படி பதிவு செய்த சிறு வியாபாரிகளுக்கு அவர்கள் 60 வயது நிரம்பிய பிறகு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும்.

நாடு முழுவதும் 3 கோடி சில்லரை வியாபாரிகள் இந்த திட்டத்தால் பயன் பெறுவார்கள்.

RUBA 2 - 2025

சிறு வியாபாரிகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெறும் விழாவில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

இதை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் அஜய் திவாரி தெரிவித்தார்.

நாடு முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களில் சிலருக்கு பென்சன் கார்டை பிரதமர் மோடி வழங்குவார் என்று அவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்ததும் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories