சென்னை:
அயோத்தியில் ராமபிரானுக்கு பிரம்மாண்டமான ஆலயம் அமைக்க மத்திய அரசும், உத்திரபிரதேச மாநில அரசும் உடனடியாக தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்கவும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அயோத்தி சம்பந்தமான வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கவும் கோரியும் மாபெரும் காவிக் கொடி ஆர்ப்பாட்டமானது இந்து முன்னணியின் சென்னை மாநகரம் சார்பில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது, தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திக் கொண்டுஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப் பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.



