மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் சோ காலமானார்

ஜெயலலிதவின் நண்பர் “சோ” ராமசாமி மரணம்

ஜெயலலிதாவின் நண்பரும் நடிகரும், பத்திரிகை அதிபர் மற்றும் ஆசிரியருமான சோ ராமசாமி, மரணமடைந்தார்.

ஏற்கெனவே முதுமை காரணமாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தார் சோ. ராமசாமி. அதே போல மீண்டும் சமீபத்தில் அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த, அதே அப்பல்லோ மருத்துமனையில் சோ ராமசாமி சிகிச்சை பெற்று வந்தார். ஓரளவு நலம் பெற்ற அவர், பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிக நெருங்கிய நண்பர். “சோ. ராமசாமி என் உடன் பிறந்த அண்ணன் போன்றவர்” என்று ஜெயலலிதா சொன்னது உண்டு.

ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆலோசனை சொல்பவர் சோ என்றும் சொல்லப்படுவது உண்டு.

இடையில் சசிகலாவை தனது போயஸ் இல்லத்தில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றிய போது, சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் பெயரிலான சில சொத்துக்களுக்கு சோ பொறுப்பாளராக ஆனார் என்ற தகவலும் வெளியானது.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு உடல் நலம் மிக மோசமானதை அறிந்த சோ.ராமசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

சிகிச்சை பலனின்றி சற்று முன் அவர் மரணமடைந்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சோ ராமசாமி மரணமடைந்ததாக இதற்கு முன் சில முறை தகவல் பரவியது குறிப்பிடதக்கது.

“சோ” ராமசாமி யார்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நண்பரும், நடிகரும், பத்திரிகை அதிபர் மற்றும் ஆசிரியருமான சோ ராமசாமி சற்று நேரத்துக்கு முன் மறைந்தார். அவருக்கு வயது 82.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அதே அப்பல்லோ மருத்துவமனையில் சோ ராமசாமியும் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் உடல் நிலை மோசமான தகவலை அறிந்த சோவுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார் சோ. அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சற்று நேரத்துக்கு முன் மறைந்தார்.

சென்னையைச் சேர்ந்த ரா.சீநிவாசன், ராஜம்மாள் தம்பதிக்கு மகனாக அக்டோபர் 5, 1934 அன்று பிறந்த சோ ராமசாமியின் இயற் பெயர் ராமசாமி.

இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். , பிறகு லயோலா கல்லூரியிலும் விவேகானந்தா கல்லூயிரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டம் பெற்றார். பிறகு சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல் பட்டம் பெற்றார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

சிறிது காலம், சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குரைஞராக பயின்ற சோ ராமசாமி, பிறகு டி.டி.கே நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராக நீண்டகாலம் பணியாற்றினார்.

இவருக்கு மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

பகீரதன் எழுதிய “தேன்மொழியாள்” என்ற நாடகத்தில் ‘சோ’ எனும் பெயரிலான பாத்திரத்தில் ராமசாமி நடித்தார். அது முதல் “சோ” ராமசாமி என அழைக்கப்பட்டார்.

“மு. பி. து” நாடக்ததில்..

நாடகங்களில் நடிப்பதோடு, நாடகங்கள் எழுதுவதிலும் சோ ஈடுபட்டார். “முகமது பின் துக்ளக்” உட்பட பல்வேறு நாடகங்களை எழுதி, நடித்து புகழ் பெற்றார்.

இந்நாடகம் பின்னாட்களில் திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது. பிரபல நடிகர்கள் பலருடன் இணைந்து நகைச்சுவை வேடங்களில் திரைப்படங்களில் நடித்தார்.

14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.

1970 ஆம் ஆண்டு “துக்ளக்” என்ற பெயரில் வார இதழைத் தொடங்கினார். தனது அரசியல் கருத்துக்களை இந்த இதழில் எழுதிவந்தார். பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

இந்திய அளவில் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரையும் அறிந்தவர் சோ ராமசாமி. இவரது முயற்சியால் பல்வேறு அரசியல் திருப்பங்கள், ஆட்சி மாறறங்கள் ஏற்பட்டுள்ளன. மிகச் சிறந்த நகைச்சவை நடிகர், எழுத்தாளர், அரசியல் நையாண்டி செய்வதில் வல்லவர் என்றெல்லாம் புகழப்படுபவர் சோ ராமசாமி.

அதே நேரம், “பிராமண பற்றாளரான இவர் சாதி வேறுபாடுகளை விரும்புபவர், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர், ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கருதப்பட்டும் மிடாஸ் சாராய ஆலை உட்பட ஒன்பது நிறுவனங்களுக்கு பொறுப்பு வகித்தவர், பெண் சமத்தவத்தை விரும்பாதவர், பிரச்சினைகளை கிளறிவிடுவாரே தவிர அதற்கு தீர்வு சொல்லமாட்டார்” என்பன போன்ற விமர்சனங்களும் இவர் மீது உண்டு.

பாராட்டும் விமர்சனமும் கலந்து இருந்தாலும், தமிழக அரசியலிலும், திரையுலக நகைச்சுவையிலும், பத்திரிகைத் துறையிலும் தவிர்க்க முடியாத நபர், சோ ராமசாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories