ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்! காவல் நிலையத்தில் சரண்டர்!

kittappan - 2026

கிட்டப்பன் (35) எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருபவர் அவரின் மனைவி பெயர் சுமதி (27) கிட்டப்பனுக்கும் சுமதிக்கும் திருமணமாகி வீரமணி, பரணி என 2 மகன்கள் உள்ளனர். காட்டுப்பாக்கம் அம்மன்நகர் 9-வது தெருவில் குடியிருந்தனர். சுமதி மீது சந்தேகமடைந்த கிட்டப்பன், அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

இதனால் சில மாதங்களுக்கு முன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சுமதி, அருகில் உள்ள தாய்வீட்டுக்குச் சென்றுவிட்டார். கிட்டப்பன் மட்டும் தனியாக அந்த வீட்டில் குடியிருந்துவந்துள்ளார். மனைவி மற்றும் மகன்களின் படிப்புக்கு கிட்டப்பன் பணம் கொடுப்பதில்லை.

இன்று காலை மகன்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கிட்டப்பனைச் சந்திக்க சுமதி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே குடும்பச் செலவுக்குப் பணம் தராதது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கிட்டப்பன், சுமதியின் தலையில் சுத்தியலால் அடித்துள்ளார்.

இதில் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியதால் சுமதி அங்கேயே மயங்கிவிழுந்துள்ளார். அதன்பிறகு கத்தியை எடுத்து சுமதியின் கழுத்தை கிட்டப்பன் அறுத்துள்ளார். இதனால் சுமதி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

kittappan 1 - 2026

இதையடுத்து, சென்னை பூந்தமல்லி காவல்நிலையத்துக்கு ரத்தம் சொட்டச் சொட்ட கத்தியோடு காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இதனால் கிட்டப்பன் மீது கொலை வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

சுமதி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரின் உறவினர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சுமதியின் சடலத்தைப் பார்த்துக் கதறினர். பள்ளிக்குச் சென்ற சுமதியின் மகன்களும் கதறி அழுதனர். சுமதியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்குப்பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலை சம்பவம் காட்டுப்பாக்கம் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories