ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை… மீட்புப் பணியில் தொய்வு!

child step hole - 2026

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளையில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு குறைந்து வருகிறது! மீட்பு பணியில் மிகப் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது. சிறுவன் சுஜித் நிலையை அறிய முடியவில்லை என்று கூறப் படுகிறது.

காலை 4:30 மணி வரை சுவாசிப்பதை உறுதி செய்தோம். அதன் பிறகு சேறு விழுந்ததால் சுவாசம் குறித்து உறுதி செய்ய இயலவில்லை. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித்தை மீட்க பல்வேறு வகைகளில் மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். முதலில் 26 அடியில் இருந்த குழந்தை மீட்புப் பணியின் போது மண்ணின் ஈரப்பதம் காரணமாக மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் 68 அடி அழத்துக்கு குழந்தை சென்றதால் மீட்பு பணியில் மிகப் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் மனம் தளராமல் பல்வேறு முயற்சிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

இரவு முழுவதும் தூக்கம் மறந்து, அமைச்சர்கள், அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். விடிய, விடிய நடந்து வரும் மீட்புப் பணியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் அதிகாரிகள் மீட்பு பணிகளை கண்காணித்தனர்.

ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தையை மீட்க ஐஐடியில் இருந்து மேலும் ஒரு குழு விரைந்தது. ஐஐடி குழுவினர் கொண்டுவந்த நவீன சாதனங்கள் மூலம் குழந்தையை மீட்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

child step hole1 - 2026

15 கிலோ எடைகொண்ட சாதனம் மூலம் குழந்தைக்கு ஆக்சிஜன் கொடுக்க முடியும், மைக் மூலம் பேசமுடியும் என்று கூறப் பட்டது வெங்கடேஷ் தலைமையிலான குழு தயாரித்த கருவிக்கு 2013ஆம் ஆண்டில் ஐஐடி அங்கீகாரம் வழங்கியது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், முதலில் குழந்தையில் அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்தது. தற்போது குழந்தை உள்ள ஆழ்துளையில் மண் மூடியதால் குழந்தையில் குரலைக் கேட்க முடியவில்லை. இதனால் மீட்புப் பணியில் சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை மீட்புப் பணி சவாலாக உள்ளது என்றார்.

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories