ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை… மீட்புப் பணியில் தொய்வு!

child step hole - 2026

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளையில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு குறைந்து வருகிறது! மீட்பு பணியில் மிகப் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது. சிறுவன் சுஜித் நிலையை அறிய முடியவில்லை என்று கூறப் படுகிறது.

காலை 4:30 மணி வரை சுவாசிப்பதை உறுதி செய்தோம். அதன் பிறகு சேறு விழுந்ததால் சுவாசம் குறித்து உறுதி செய்ய இயலவில்லை. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித்தை மீட்க பல்வேறு வகைகளில் மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். முதலில் 26 அடியில் இருந்த குழந்தை மீட்புப் பணியின் போது மண்ணின் ஈரப்பதம் காரணமாக மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் 68 அடி அழத்துக்கு குழந்தை சென்றதால் மீட்பு பணியில் மிகப் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் மனம் தளராமல் பல்வேறு முயற்சிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இரவு முழுவதும் தூக்கம் மறந்து, அமைச்சர்கள், அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். விடிய, விடிய நடந்து வரும் மீட்புப் பணியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் அதிகாரிகள் மீட்பு பணிகளை கண்காணித்தனர்.

ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தையை மீட்க ஐஐடியில் இருந்து மேலும் ஒரு குழு விரைந்தது. ஐஐடி குழுவினர் கொண்டுவந்த நவீன சாதனங்கள் மூலம் குழந்தையை மீட்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

child step hole1 - 2026

15 கிலோ எடைகொண்ட சாதனம் மூலம் குழந்தைக்கு ஆக்சிஜன் கொடுக்க முடியும், மைக் மூலம் பேசமுடியும் என்று கூறப் பட்டது வெங்கடேஷ் தலைமையிலான குழு தயாரித்த கருவிக்கு 2013ஆம் ஆண்டில் ஐஐடி அங்கீகாரம் வழங்கியது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், முதலில் குழந்தையில் அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்தது. தற்போது குழந்தை உள்ள ஆழ்துளையில் மண் மூடியதால் குழந்தையில் குரலைக் கேட்க முடியவில்லை. இதனால் மீட்புப் பணியில் சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை மீட்புப் பணி சவாலாக உள்ளது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories