தந்தையை கைவிட்ட மகள்! சொத்து பத்திரத்தை ரத்து செய்து கோட்டாட்சியர் அதிரடி!

prooperty - 2026

தந்தையை கவனிக்காமல் விட்டதால், மகளுக்கு தானமாக வழங்கிய ரூ.3.80 கோடி நில உரிமைக்கான ஆவணத்தை ரத்து செய்து கோட்டாட்சியர் உத்தர விட்டார்.

இது குறித்து மதுரை மாவட்டம் திருமங்கலம் கோட்டாட்சியர் முருகேசன் கூறியது: திருமங்கலம் அருகே உள்ள மாவிலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வைரன்(81). இவர் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஊழியர். மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார். இவருக்கு 3 மகன், 1 மகள். இவர்களில் ஒரு மகன் இறந்துவிட்டார். ஒரு மகன் வறுமையில் வாழ்கிறார். ஒரு மகன் குடும்பத் தொடர்பு இல்லாமல் தனியாக வசிக்கிறார்.

மகள் தமிழ்மணி திருநெல்வேலி அருகே அரசு உதவி பெறும் கல்லூரியில் பேராசியையாகப் பணியாற்றுகிறார். இவர் தந்தையை நன்றாகக் கவனித்துள்ளார். இதனால் வைரன் தனது ரூ.3.80 கோடி மதிப்புள்ள 6.37 ஏக்கர் நிலத்தை 15 ஆண்டுகளுக்கு முன்பே மகள் பெயரில் தானப் பத்திரம் எழுதித் தந்துள்ளார்.

பிறகு தந்தையை கவனித்துக் கொள்வதில் மகள் ஆர்வம் காட்டவில்லை. தனது நிலத்தில் சிறிய வீடு கட்டி தந்தை வசித்து வந்தார். இந்த நிலத்தை விற்க வேண்டுமெனக்கூறி தந்தையைக் கட்டாயப்படுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றி, வீட்டையும் இடித்து விட்டார்.

இதனால் வைரன் ஊரைவிட்டே வெளியேறி சிலரது உதவியுடன் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தற்போது வசித்து வருகிறார். வாழ வழியில்லாத நிலையில், மகளின் செயலால் மனம் நொந்த வைரன் தன்னிடம் புகார் அளித்தார்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தந்தை, மகளை அழைத்து விசாரணை செய்தேன். இதில், தந்தைக்கு தேவைப்படும் போதெல்லாம் செலவுக்கு ஏராளமான பணத்தை வழங்கியுள்ளதாகவும், அவர் வழங்கிய நிலத்தின் மதிப்பைவிட அதிக பணம் வழங்கியுள்ளேன் என்பதால், நிலத்தை சும்மா வழங்கவில்லை என்றும் மகள் தெரிவித்தார்.

மகள் வழங்கிய பணம் தந்தையின் வாழ்வு ஆதாரத்துக்கானது. இதைக்கூறி மகள் உரிமை கொண்டாட முடியாது. பெற்றோர் சொத்துகளை வழங்கினால்தான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில்லை.

எந்த சொத்தும் வழங்காமல் இருந்தாலும், அவர்களைப் பாதுகாக்கும் கடமை குழந்தைகளுக்கு உள்ளது. அதேநேரம், வைரன் தனது மகளுக்கு அதிக மதிப்புள்ள நிலத்தை வழங்கியும், தன்னை பாதுகாக்க மகள் தவறிவிட்டதாகவும், சொத்தை வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து மகளுக்கு தந்தை தானமாக வழங்கிய நிலத்துக்கான ஆவணத்தை ரத்து செய்து செக்காணூரணி சார்-பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். அதன்பேரில் தானப் பத்திரப் பதிவு ரத்து செய்யப்படும். இதனால், நிலம் மீண்டும் வைரனுக்கே சொந்தமாகும்.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் பிரிவு 23(1)-ன் கீழ் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கோட்டாட்சியருக்கு உள்ளது. ஏற்கெனவே இதேபோல் 3 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது என்றார்.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories