December 5, 2025, 5:19 PM
27.9 C
Chennai

தந்தையை கைவிட்ட மகள்! சொத்து பத்திரத்தை ரத்து செய்து கோட்டாட்சியர் அதிரடி!

prooperty - 2025

தந்தையை கவனிக்காமல் விட்டதால், மகளுக்கு தானமாக வழங்கிய ரூ.3.80 கோடி நில உரிமைக்கான ஆவணத்தை ரத்து செய்து கோட்டாட்சியர் உத்தர விட்டார்.

இது குறித்து மதுரை மாவட்டம் திருமங்கலம் கோட்டாட்சியர் முருகேசன் கூறியது: திருமங்கலம் அருகே உள்ள மாவிலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வைரன்(81). இவர் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஊழியர். மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார். இவருக்கு 3 மகன், 1 மகள். இவர்களில் ஒரு மகன் இறந்துவிட்டார். ஒரு மகன் வறுமையில் வாழ்கிறார். ஒரு மகன் குடும்பத் தொடர்பு இல்லாமல் தனியாக வசிக்கிறார்.

மகள் தமிழ்மணி திருநெல்வேலி அருகே அரசு உதவி பெறும் கல்லூரியில் பேராசியையாகப் பணியாற்றுகிறார். இவர் தந்தையை நன்றாகக் கவனித்துள்ளார். இதனால் வைரன் தனது ரூ.3.80 கோடி மதிப்புள்ள 6.37 ஏக்கர் நிலத்தை 15 ஆண்டுகளுக்கு முன்பே மகள் பெயரில் தானப் பத்திரம் எழுதித் தந்துள்ளார்.

பிறகு தந்தையை கவனித்துக் கொள்வதில் மகள் ஆர்வம் காட்டவில்லை. தனது நிலத்தில் சிறிய வீடு கட்டி தந்தை வசித்து வந்தார். இந்த நிலத்தை விற்க வேண்டுமெனக்கூறி தந்தையைக் கட்டாயப்படுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றி, வீட்டையும் இடித்து விட்டார்.

இதனால் வைரன் ஊரைவிட்டே வெளியேறி சிலரது உதவியுடன் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தற்போது வசித்து வருகிறார். வாழ வழியில்லாத நிலையில், மகளின் செயலால் மனம் நொந்த வைரன் தன்னிடம் புகார் அளித்தார்.

தந்தை, மகளை அழைத்து விசாரணை செய்தேன். இதில், தந்தைக்கு தேவைப்படும் போதெல்லாம் செலவுக்கு ஏராளமான பணத்தை வழங்கியுள்ளதாகவும், அவர் வழங்கிய நிலத்தின் மதிப்பைவிட அதிக பணம் வழங்கியுள்ளேன் என்பதால், நிலத்தை சும்மா வழங்கவில்லை என்றும் மகள் தெரிவித்தார்.

மகள் வழங்கிய பணம் தந்தையின் வாழ்வு ஆதாரத்துக்கானது. இதைக்கூறி மகள் உரிமை கொண்டாட முடியாது. பெற்றோர் சொத்துகளை வழங்கினால்தான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில்லை.

எந்த சொத்தும் வழங்காமல் இருந்தாலும், அவர்களைப் பாதுகாக்கும் கடமை குழந்தைகளுக்கு உள்ளது. அதேநேரம், வைரன் தனது மகளுக்கு அதிக மதிப்புள்ள நிலத்தை வழங்கியும், தன்னை பாதுகாக்க மகள் தவறிவிட்டதாகவும், சொத்தை வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து மகளுக்கு தந்தை தானமாக வழங்கிய நிலத்துக்கான ஆவணத்தை ரத்து செய்து செக்காணூரணி சார்-பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். அதன்பேரில் தானப் பத்திரப் பதிவு ரத்து செய்யப்படும். இதனால், நிலம் மீண்டும் வைரனுக்கே சொந்தமாகும்.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் பிரிவு 23(1)-ன் கீழ் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கோட்டாட்சியருக்கு உள்ளது. ஏற்கெனவே இதேபோல் 3 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories