December 6, 2025, 7:12 AM
23.8 C
Chennai

விஷவண்டு கடித்து உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ., உடலுக்கு முதல்வர் அஞ்சலி!

exmla edappadi ops - 2025

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள புதுவை மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன புருஷோத்தமன் உடலுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.

விஷவண்டு கடித்ததால் உயிரிழந்த புதுவை அதிமுக செயலாளர் உடலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் அஞ்சலி செலுத்தினார்.

புதுவை அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான புருஷோத்தமன், நேற்று விழுப்புரம் மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள தனது விவசாய நிலத்தை பார்வையிட சென்றுபோது விஷ வண்டு கடித்து மயக்கமடைந்தார். பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் மருத்துவமனை வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புருஷோத்தமனின் மறைவு புதுச்சேரிக்கு மட்டுமின்றி அதிமுகவிற்கும் பேரிழப்பு என்று தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் பதவி வகித்து வந்தவர் முன்னாள் எம்எல்ஏ புருஷோத்தமன். மணவெளியில் வசித்து வந்த இவர், புதுச்சேரி – தமிழக எல்லையான ராதாபுரத்தில் உள்ள தனது விவசாய நிலத்தை பார்வையிட சனிக்கிழமை காலை சென்றுள்ளார்.

அப்போது வயல் வெளியில் சுற்றித்திரிந்த விஷத் தன்மையுள்ள கடந்தை வண்டு புருசோத்தமனை கொட்டியதால் அவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை சிகிச்சைகாக விக்கிரவாண்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். புருஷோத்தமனுக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், 5 மகள்களும் உள்ளனர். புருஷோத்தமன் 2014-ம் ஆண்டு முதல் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளராக பொறுப்பு வகித்தார்.

அரியாங்குப்பம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவாகவும் பொறுப்பு வகித்துள்ளார். புருஷோத்தமன், மறைந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories