விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடந்த 2000-ஆவது ஆண்டில் நடந்த பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட 18 பேரை இன்று விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. இன்று பேருந்து எரிப்பு வழக்கு விசாரணை விழுப்புரம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி குற்றம் சாட்டப்பட்ட திருமாவளவன் உட்பட 18 பேர் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்வதாக இன்று உத்தரவிட்டார். முன்னதாக, கடலூர் மாவட்டத்தில் கடந்த 2000-த்தில் 3 தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது விழுப்புரம் மாவட்டம் லிங்காரெட்டிபாளையம் என்ற இடத்தில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து நடத்துனர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் வளவனூர் போலீஸார் தொல். திருமாவளவன் உட்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேருந்து எரிப்பு வழக்கில் திருமாவளவன் விடுதலை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari