January 23, 2025, 6:11 AM
23.2 C
Chennai

பேருந்து எரிப்பு வழக்கில் திருமாவளவன் விடுதலை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடந்த 2000-ஆவது ஆண்டில் நடந்த பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட 18 பேரை இன்று விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. இன்று பேருந்து எரிப்பு வழக்கு விசாரணை விழுப்புரம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி குற்றம் சாட்டப்பட்ட திருமாவளவன் உட்பட 18 பேர் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்வதாக இன்று உத்தரவிட்டார். முன்னதாக, கடலூர் மாவட்டத்தில் கடந்த 2000-த்தில் 3 தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது விழுப்புரம் மாவட்டம் லிங்காரெட்டிபாளையம் என்ற இடத்தில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து நடத்துனர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் வளவனூர் போலீஸார் தொல். திருமாவளவன் உட்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.

Topics