
கடலூர் மாவட்டம் நெய்வேலி நாவலர் தெருவை சேர்ந்தவர் நாராயணன்
இவரது மகன் ரஜினி முருகன் (49). இவர் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார்.
இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தி (35) என்ற என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது வரை இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில், கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை நாராயணன் தனது மகன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு சாந்தி வாயில் நுரை தள்ளிய நிலையில் சாந்தி பிணமாக கிடந்தார்.

மேலும் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் ரஜினி முருகன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



