சசிகலாவுக்கு எதிராகப் பேசிய எம்.எல்.ஏ.,வுக்கு அடி உதை: ஆம்புலன்ஸ் விரைந்த மர்மம்

சென்னை:
மன உளைச்சல் காரணமாக கூவத்தூர் சொகுசு விடுதியில் சிறைவைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ., சசிகலாவுக்கு எதிராகப் பேசி முரண்டு பிடித்ததால், அவருக்கு அடி உதை விழுந்தது. இதனால் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க விரைந்தனர். இதைக் கண்ட அதிர்ச்சியில்  உறைந்தனர் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்.

கூவத்தூரில் முதல் நாள் , 3.48 மணிக்கும், இரண்டாம் நாள்  5.00 மணிக்கும் 3ம் நாளான இன்று மாலை  5.45 மணிக்கும் சசிகலா வந்திருக்கிறார். இன்று இரவு எம்.எல்.ஏக்களோடு அங்கேயே தங்குவதற்கான முன்னேற்பாடுகளோடு தான் சசிகலா வந்திருக்கிறார்.

எம்.எல்.ஏக்கள் இங்கே கடந்த 6 நாட்களாக கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். எம்.எல்.ஏக்களுக்கு பல வகையான உணவுகளும், சிற்றுண்டிகளும் டான்ஸ் போதை என்று உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியிலே வைக்கப்பட்டிருந்தாலும், தகவல் தொடர்புகள் எல்லாம் துண்டிக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அங்கே பாதுகாப்புக்கு இருக்கும் செந்தில்பாலாஜி, ஓ.எஸ்.மணியன், ஜெயக்குமார் ஆகியோர் அவர்களிடம் சசிகலாவுக்கு ஆதரவு தரும்படி தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதால் சிலர் எரிச்சல் அடைந்தார்களாம்.

இதன் காரணமாகத்தான், செய்யாறு எம்.எல்.ஏ மோகன் சசிகலாவுக்கு எதிராகப் பேசியதாகவும், நான் எப்படியும் மாற்றித்தான் ஓட்டு போடுவேன் என்று முரண்டு பிடித்ததால். செம்மையாக அவரைக் கவனித்ததாகவும் கூறப்படுகிறது.  இது மற்ற அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பிறகே முதல் உதவிக்கு ஆம்புலன்ஸ், டாக்டர்களை வரவழைத்தி ருக்கிறார்கள்.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

இதைத் தொடர்ந்துதான், சசிகலா இரவு கூவத்தூரில் தங்கும் ஏற்பாடுகளோடு வந்திருக்கிறாராம். மேலும், நாளை உச்ச நீதிமன்றத்தில் வரும் தீர்ப்பைப் பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வசதியாக அங்கே அவர் தங்குவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories