கொள்ளையர்கள் இடமிருந்து நாட்டை மீட்கவே தேர்தல்! ஆக.., யோசித்து வாக்களிக்கவும்!

stalin 2 - 2026

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.24) உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கக் கோரி தமது முகநூல் – ட்விட்டர் – யூ ட்யூப் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் காணொலி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:

“எப்போதோ நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இப்போதுதான் நடக்கவிருக்கிறது. 2016-ல் நடக்க வேண்டிய தேர்தலை 3 ஆண்டுகளாக அதிமுக அரசு தள்ளிப்போட்டது. மக்களை சந்திக்க அதிமுகவுக்கு பயம்.

தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், மக்கள் அவர்களிடம் குறைகளை சொல்லி அவ்வப்போது அவை தீர்க்கப்பட்டிருக்கும்.

stalin 1 - 2026

ஆனால், இப்போது மக்களின் குறைகள் கணக்கிலடங்காதவை. கேட்பதற்கு யாரும் இல்லை. அதனால் தான் நானும், திமுக நிர்வாகிகளும் அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று மக்களின் குறைகளைக் கேட்டோம்.

குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலைவசதி, முறையான முதியோர் உதவித்தொகை, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சுழல் நிதி, 100 நாள் வேலைவாய்ப்பு, இப்படி மிகவும் எளிதாகத் தீர்க்கக்கூடிய சாதாரணமான குறைகளைத்தான் மக்கள் தெரிவித்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் நடந்திருந்தால் இதில் 60% குறைகள் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும்.

stalin - 2026

தேர்தல் முன்பே நடத்தப்படாததற்கு இரண்டு காரணங்கள் தான். தேர்தல் நடந்தால் திமுக வென்றுவிடும் என்கிற பயம் முதல் காரணம்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் வந்துவிட்டால் வழக்கம் போல கொள்ளையடிக்க முடியாது என்பது இரண்டாவது காரணம்.

ஊழல், லஞ்சம், டெங்கு காய்ச்சல், காசநோய், என எவையெல்லாம் மக்களுக்கு எதிரானதோ அதிலெல்லாம் இந்த ஆட்சி முதலிடத்தில் உள்ளது. இதுதான் இந்த ஆட்சியின் சாதனை.

தமிழக அமைச்சரவையே கிரிமினல் கேபினட்டாக உள்ளது. இது இந்தியாவுக்கே அவமானம். இப்படிப்பட்டவர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்குத்தான் இப்போதைய உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

நாளை நல்லாட்சி அமைய திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்” இவ்வாறு அந்த காணொலியில் ஸ்டாலின் பேசியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

Entertainment News

Popular Categories