கொள்ளையர்கள் இடமிருந்து நாட்டை மீட்கவே தேர்தல்! ஆக.., யோசித்து வாக்களிக்கவும்!

stalin 2 - 2026

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.24) உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கக் கோரி தமது முகநூல் – ட்விட்டர் – யூ ட்யூப் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் காணொலி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:

“எப்போதோ நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இப்போதுதான் நடக்கவிருக்கிறது. 2016-ல் நடக்க வேண்டிய தேர்தலை 3 ஆண்டுகளாக அதிமுக அரசு தள்ளிப்போட்டது. மக்களை சந்திக்க அதிமுகவுக்கு பயம்.

தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், மக்கள் அவர்களிடம் குறைகளை சொல்லி அவ்வப்போது அவை தீர்க்கப்பட்டிருக்கும்.

stalin 1 - 2026

ஆனால், இப்போது மக்களின் குறைகள் கணக்கிலடங்காதவை. கேட்பதற்கு யாரும் இல்லை. அதனால் தான் நானும், திமுக நிர்வாகிகளும் அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று மக்களின் குறைகளைக் கேட்டோம்.

குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலைவசதி, முறையான முதியோர் உதவித்தொகை, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சுழல் நிதி, 100 நாள் வேலைவாய்ப்பு, இப்படி மிகவும் எளிதாகத் தீர்க்கக்கூடிய சாதாரணமான குறைகளைத்தான் மக்கள் தெரிவித்தனர்.

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

உள்ளாட்சித் தேர்தல் நடந்திருந்தால் இதில் 60% குறைகள் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும்.

stalin - 2026

தேர்தல் முன்பே நடத்தப்படாததற்கு இரண்டு காரணங்கள் தான். தேர்தல் நடந்தால் திமுக வென்றுவிடும் என்கிற பயம் முதல் காரணம்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் வந்துவிட்டால் வழக்கம் போல கொள்ளையடிக்க முடியாது என்பது இரண்டாவது காரணம்.

ஊழல், லஞ்சம், டெங்கு காய்ச்சல், காசநோய், என எவையெல்லாம் மக்களுக்கு எதிரானதோ அதிலெல்லாம் இந்த ஆட்சி முதலிடத்தில் உள்ளது. இதுதான் இந்த ஆட்சியின் சாதனை.

தமிழக அமைச்சரவையே கிரிமினல் கேபினட்டாக உள்ளது. இது இந்தியாவுக்கே அவமானம். இப்படிப்பட்டவர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்குத்தான் இப்போதைய உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

நாளை நல்லாட்சி அமைய திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்” இவ்வாறு அந்த காணொலியில் ஸ்டாலின் பேசியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories