December 5, 2025, 5:54 PM
27.9 C
Chennai

கொள்ளையர்கள் இடமிருந்து நாட்டை மீட்கவே தேர்தல்! ஆக.., யோசித்து வாக்களிக்கவும்!

stalin 2 - 2025

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.24) உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கக் கோரி தமது முகநூல் – ட்விட்டர் – யூ ட்யூப் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் காணொலி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:

“எப்போதோ நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இப்போதுதான் நடக்கவிருக்கிறது. 2016-ல் நடக்க வேண்டிய தேர்தலை 3 ஆண்டுகளாக அதிமுக அரசு தள்ளிப்போட்டது. மக்களை சந்திக்க அதிமுகவுக்கு பயம்.

தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், மக்கள் அவர்களிடம் குறைகளை சொல்லி அவ்வப்போது அவை தீர்க்கப்பட்டிருக்கும்.

stalin 1 - 2025

ஆனால், இப்போது மக்களின் குறைகள் கணக்கிலடங்காதவை. கேட்பதற்கு யாரும் இல்லை. அதனால் தான் நானும், திமுக நிர்வாகிகளும் அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று மக்களின் குறைகளைக் கேட்டோம்.

குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலைவசதி, முறையான முதியோர் உதவித்தொகை, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சுழல் நிதி, 100 நாள் வேலைவாய்ப்பு, இப்படி மிகவும் எளிதாகத் தீர்க்கக்கூடிய சாதாரணமான குறைகளைத்தான் மக்கள் தெரிவித்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் நடந்திருந்தால் இதில் 60% குறைகள் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும்.

stalin - 2025

தேர்தல் முன்பே நடத்தப்படாததற்கு இரண்டு காரணங்கள் தான். தேர்தல் நடந்தால் திமுக வென்றுவிடும் என்கிற பயம் முதல் காரணம்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் வந்துவிட்டால் வழக்கம் போல கொள்ளையடிக்க முடியாது என்பது இரண்டாவது காரணம்.

ஊழல், லஞ்சம், டெங்கு காய்ச்சல், காசநோய், என எவையெல்லாம் மக்களுக்கு எதிரானதோ அதிலெல்லாம் இந்த ஆட்சி முதலிடத்தில் உள்ளது. இதுதான் இந்த ஆட்சியின் சாதனை.

தமிழக அமைச்சரவையே கிரிமினல் கேபினட்டாக உள்ளது. இது இந்தியாவுக்கே அவமானம். இப்படிப்பட்டவர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்குத்தான் இப்போதைய உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

நாளை நல்லாட்சி அமைய திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்” இவ்வாறு அந்த காணொலியில் ஸ்டாலின் பேசியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories