‘கொலைகாரப் பேச்சாளர்’ நெல்லை கண்ணன் மீது வழக்குப் பதிவு!

nellai kannan speech - 2026

திருநெல்வேலி, மேலப்பாளையத்தில், எஸ்.டி.பி.ஐ., இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இஸ்லாமியர்கள் நிறைந்த இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் காங்கிரஸ் பிரமுகரும் இலக்கிய பேச்சாளராக அறியப் பட்டவருமான நெல்லை கண்ணன். அப்போது அவர், பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசினார். ஒருமையில் ஒரு நாட்டின் பிரதமரைக் குறித்துப் பேசி, அங்கே கூடியிருந்த இஸ்லாமியர்களை மகிழ்வித்தார்.

தொடர்ந்து, இஸ்லாமியர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சோலியை முடித்துவிடுவீர்கள் என்று பார்த்தேன். இன்னும் முடிக்காமல் இருக்கீங்களே என்று கூறி, மோடி, அமித் ஷா ஆகியோரை இஸ்லாமியர்கள் கொலை செய்ய வேண்டும் என்று தூண்டிவிட்டுப் பேசினார்.

இவரது பேச்சு, சமூகத் தளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாட்டின் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் கொலை செய்யத் தூண்டும் வகையிலும், ஹிந்து மதம் குறித்து அவதுாறாகவும் பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ.,வினர் மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் நேற்று காவல் ஆணையர் தீபக் தாமோரிடம் மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து நெல்லை கண்ணன் மீது மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு (FIR Cr no 423/19) செய்தனர். நெல்லை கண்ணன் மீது, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 504, 505(1)(பி), 505(2) ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

மேலும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோரைக் கொலை செய்யுமாறு முஸ்லிம்கள் நிறைந்த கூட்டத்தில் பொதுவெளியில் பேசியுள்ளதால், அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அனைத்து முகாந்திரங்களும் உள்ளது என்றும், இது மாநில அரசின் வரம்புக்குள்ளும் வராது என்றும் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories