December 6, 2025, 2:49 PM
29 C
Chennai

சொத்திற்காக கூலிப்படை வைத்து மனைவியைக் கொன்ற பயங்கரம்!

laavanya - 2025

மதுரை ரேஸ்கோர்ஸ் சாலை, பாரதி உலா வீதியை சேர்ந்தவர் மாரியப்ப நாடார், பிரபல பாத்திரக்கடை உரிமையாளரான இவருக்கு சீனியம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகள்களும், குமரகுரு என்ற மகனும் உள்ளனர். குமரகுருவிற்கு லாவண்யா என்பவருடன் திருமணம் முடிந்து 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவதன்று அதிகாலை 4 மணிக்கு குமரகுரு வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் இருவர் முதல் தளத்தில் குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்த லாவண்யாவை கத்தியால் சரமாரியாகக் குத்தி கொலை செய்துள்ளனர்.

சத்தம் கேட்டு எழுந்த அவரின் மூத்தமகள் அலறிக்கொண்டு கீழே ஓடிவந்து ஹாலில் படுத்திருந்த சீனியம்மாளிடம் சொல்ல, மாடியிலிருந்து இறங்கி வந்தவர்களை அவர், யார் நீங்கள் என்று கேட்க அவரையும் அவர்கள் குத்திவிட்டுத் தப்பித்துள்ளனர்.

murder 1 - 2025

சத்தம்கேட்டு குமரகுரு வெளியே வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் தாயார் கீழே கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் லாவண்யாவும் இறந்துவிட்டதாக மகள் கூறி அழ, மாடிக்கு சென்ற பார்த்த போது ரத்த வெள்ளத்தில் லாவண்யா இறந்த நிலையில் கிடந்தார்.

இதையடுத்து சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடி கொண்டிருந்த சீனியம்மாளை மருத்துவமனைக்குத் தூக்கி சென்றனர். அத்துடன் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று வீட்டின் கதவு திறந்து கிடந்ததும், சாதாரணமாக மர்மநபர்கள் உள்ளே நுழைந்திருப்பதையும் கண்டுபிடித்தனர் .

policeinvestigation - 2025

இதனால் குமரகுருவிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மனைவியை கொன்றதில் அவருக்கு தொடர்புள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘என் தந்தை இறந்த பிறகு எனக்கு வந்த சொத்துக்களில் பாதியை என் மனைவி பெயருக்கு எழுதி வைத்தேன். என் கடையில் வியாபாரம் குறைந்து வீட்டில் செலவு அதிகமானது. இதனால் சொத்துக்களை விற்று செலவு செய்து வந்தேன்.

crime - 2025

மனைவி பெயரிலிருந்த சொத்துக்களைக் கேட்டபோது அவள் தரவில்லை. இதனால் அவளுக்கும் எனக்கும் பேச்சுவார்த்தை இல்லை. என் அம்மாவும் அவளுக்கு ஆதரவாக இருந்தார். இதனால் இதுகுறித்து கடையில் வேலைசெய்யும் அலெக்ஸ் என்பவரிடம் கூறினேன்.

உங்களுக்கு தொல்லையாக இருந்தால் உங்கள் குடும்பத்தை கொலை செய்துவிடலாம். என்னிடம் ஆட்கள் இருக்கிறார்கள் என்றார். அதன்படி, 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து கூலிப்படையைத் தயார் செய்தேன்.

சம்பவத்தன்று கதவை திறந்து வைத்து என் மனைவியை கொல்ல கூலி படையினருக்கு தகவல் கொடுத்தேன். அவர்கள் கதவை திறந்து நேராக மாடிக்கு சென்று மனைவியை கொலை செய்து விட்டனர்.

kaithu - 2025

அப்போது என் அம்மா இடையில் வந்ததால் அவரை குத்திவிட்டு அவர்கள் தப்பித்தனர். சில நாட்களுக்கு முன்பு அனைவரும் ஊருக்கு சென்றோம். அங்கு வைத்து கொலை செய்ய முயன்ற போது மனைவி தலையில் மட்டும் வெட்டு விழுந்து தப்பித்து கொண்டார்.

இதை நாங்கள் பெரிதாக்கவில்லை. அங்கு சிசிடிவி கேமிராவில் அந்த சம்பவம் பதிவானது. அதனால் என் வீட்டில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஒரு வாரத்திற்கு முன்பே நீக்கிவிட்டேன்’ என்று கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories