கட்டிலில் அப்படி கிடந்த தோழி…! வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தோழிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

women 1 - 2026

ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்று வீட்டுக்குள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தாள். அவரை யாரேனும் கற்பழித்து கொலை செய்தார்களா என காவ்லதுறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டம், கொரெக்ட் கிராமத்தை சேர்ந்த திலீப்குமார் என்பவரின் மகள் கரினா பிரியதர்ஷினி (21). அதே மாநிலத்தில் பெர்ஷாம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதாகுமாரி (22). இவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடத்தில் பிரபல பைக் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர்.

மேலும், இவர்கள் இருவரும் படப்பை அருகே ஆத்தனஞ்சேரி, பெரியார் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று ரஞ்சிதா வழக்கம் போல் வேலைக்கு சென்றார். வீட்டில் கரினா தனியே இருந்துள்ளார்.

sriperumputhur - 2026

பின்னர் மாலை ரஞ்சிதா வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டுக் கதவு திறந்திருந்த நிலையில் இருந்ததை பார்த்து ரஞ்சிதா சந்தேகித்தார். பின்னர் அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு படுக்கையில் கரினா போர்வையை போர்த்திக்கொண்டு படுத்த நிலையில் கிடந்துள்ளார்.

போர்வையை விலக்கி பார்த்தபோது முகம், கழுத்து பகுதியில் நகக்கீறல் காயங்களுடன் கரினா மர்மமான முறையில் இறந்து கிடப்பதை ரஞ்சிதா கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் மணிமங்கலம் காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு கரினாவின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், கடந்த 2 வருடங்களாக கரினாவும் அவரது சொந்த ஊரை சேர்ந்த மானஸ் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.

சோழிங்கநல்லூர் அடுத்த சிறுசேரி பகுதியில் மானஸ் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் கரினாவும் மானசும் செல்போனில் காரசாரமாக சண்டை போட்டுள்ளனர்.

இதையடுத்து கரினா மனஉளைச்சலில் இருந்துள்ளார் எனத் தெரியவந்தது. இதையடுத்து சம்பவ தினத்தன்று கரினாவின் வீட்டில் மானஸ் மீண்டும் சண்டையிட்டு, அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்தாரா அல்லது வேறு யாரேனும் கரினாவை கற்பழித்து கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் காவல்துறையின்ர் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories