கட்டிலில் அப்படி கிடந்த தோழி…! வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தோழிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

women 1 - 2026

ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்று வீட்டுக்குள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தாள். அவரை யாரேனும் கற்பழித்து கொலை செய்தார்களா என காவ்லதுறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டம், கொரெக்ட் கிராமத்தை சேர்ந்த திலீப்குமார் என்பவரின் மகள் கரினா பிரியதர்ஷினி (21). அதே மாநிலத்தில் பெர்ஷாம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதாகுமாரி (22). இவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடத்தில் பிரபல பைக் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர்.

மேலும், இவர்கள் இருவரும் படப்பை அருகே ஆத்தனஞ்சேரி, பெரியார் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று ரஞ்சிதா வழக்கம் போல் வேலைக்கு சென்றார். வீட்டில் கரினா தனியே இருந்துள்ளார்.

sriperumputhur - 2026

பின்னர் மாலை ரஞ்சிதா வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டுக் கதவு திறந்திருந்த நிலையில் இருந்ததை பார்த்து ரஞ்சிதா சந்தேகித்தார். பின்னர் அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு படுக்கையில் கரினா போர்வையை போர்த்திக்கொண்டு படுத்த நிலையில் கிடந்துள்ளார்.

போர்வையை விலக்கி பார்த்தபோது முகம், கழுத்து பகுதியில் நகக்கீறல் காயங்களுடன் கரினா மர்மமான முறையில் இறந்து கிடப்பதை ரஞ்சிதா கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் மணிமங்கலம் காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு கரினாவின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், கடந்த 2 வருடங்களாக கரினாவும் அவரது சொந்த ஊரை சேர்ந்த மானஸ் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.

சோழிங்கநல்லூர் அடுத்த சிறுசேரி பகுதியில் மானஸ் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் கரினாவும் மானசும் செல்போனில் காரசாரமாக சண்டை போட்டுள்ளனர்.

இதையடுத்து கரினா மனஉளைச்சலில் இருந்துள்ளார் எனத் தெரியவந்தது. இதையடுத்து சம்பவ தினத்தன்று கரினாவின் வீட்டில் மானஸ் மீண்டும் சண்டையிட்டு, அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்தாரா அல்லது வேறு யாரேனும் கரினாவை கற்பழித்து கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் காவல்துறையின்ர் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories