அழகாய் இருப்பதால் தானே ஓடிப்போய் திருமணம் செய்தாய்.. கர்ப்பிணி மகளின் முகத்தில் ஆசிட் ஊற்றிய ஆத்திர தந்தை!

deepika - 2026

வீட்டுக்கு தெரியாமல் மகள் திருமணம் செய்து கொண்டார். இப்போது மகள் 5 மாத கர்ப்பிணி. இந்த விஷயம் தெரிந்த பெற்ற தந்தை மகளின் முகத்தில் ஆசிட்டை வீசி கொல்ல பார்த்துள்ளார். இந்த சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு டன்லப் நகரை சேர்ந்த தம்பதி பாலாஜி – பாக்கியலட்சுமி. இவர்களது மகன் சாய்குமார். 24 வயதாகிறது. ஏசி மெக்கானிக்காக சென்னையில் வேலை பார்க்கிறார்.

deepika 1 - 2026

இவர் தங்கியிருந்த வீட்டின் அருகே தீபிகா என்ற பெண்ணை காதலித்தார்.. தீபிகாவின் அப்பா விருப்ப ஓய்வு பெற்ற ஏட்டு பாலகுமார் ஆவார்.. 6 வருடமாக தீபிகாவும் – சாய்குமாரும் காதலித்து வருகிறார்கள். விஷயம் வீட்டுக்கு தெரிந்தது.

மகளை கண்டித்தும் கேட்கவில்லை.. காதலின் ஆழம் அதிகமாக உள்ளது என்பதை புரிந்து கொண்ட ஏட்டு, மகளுக்காக உடனடியாக வீட்டை காலி செய்து, திருத்தணி அடுத்த பூனிமாங்காடு கிராமத்துக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார்.

அங்கு ஒரு காலேஜில் தீபிகாவை சேர்த்தார். மேலும் மகள் ஒழுங்காக காலேஜுக்கு போகிறாரா, இல்லையா, யாரையாவது சந்திக்க போய்விடுகிறாரா என்று பின்னாடியே சென்று நோட்டீஸ் பண்ணி கொண்டிருந்தார்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!
young lady - 2026

பெற்ற அப்பா இப்படி பின்னாடியே வந்து கண்காணிப்பதை அறிந்த தீபிகா மனமுடைந்து சாய்குமாருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். பேசுவதற்கே இவ்வளவு தடை என்றால், கண்டிப்பாக கல்யாணம் செய்து வைக்க மாட்டார்கள் என்று நினைத்து வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். கடந்த ஜுன் மாதம், பெங்களூரில் கல்யாணம் செய்து கொண்டனர். இதை கேட்டு ஏட்டுக்கு இன்னும் கோபம் வந்துவிட்டது.

சில மாதங்கள் கழித்து பெங்களூரில் இருந்து வேப்பம்பட்டில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு தீபிகாவுடன் வந்தார் சாய்குமார். தீபிகா 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இந்த விஷயம் ஏட்டுக்கு தெரிந்தது. அதனால் இன்னும் ஆத்திரமடைந்த அவர், சம்பவத்தன்று 4 பேரை கூட்டிவந்து மகளை சந்தித்தார்.

young lady 1 - 2026

ஆத்திரம், ஆவேசம் எதையுமே மகளிடம் அவர் காட்டிக் கொள்ளவில்லை. “அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. வீட்டுக்கு வந்து ஒருமுறை அம்மாவை பார்த்துட்டு வா” என்றார்.

ஆனால் தீபிகா மேலும் பயந்துகொண்டு வர முடியாது என்று மறுத்துள்ளர். இதனால் ஆத்திரமடைந்த ஏட்டு பாலகுமார், மறைத்து வைத்திருந்த ஆசிட்டை தீபிகாவின் முகத்தில் வீசினார். அதை பார்த்து பதறி கொண்டு வந்த மாமியார் பாக்கியலட்சுமி, உறவினர் திவ்யா ஆகியோர் மீதும் வீசினார். பின்னர் தீபிகாவை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி வந்திருந்த 4 பேர் துணையுடன் சென்றார்.

ALSO READ:  இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இதுபற்றி செவ்வாப்பேட்டை காவல்துறைக்கு தகவல் சொல்லவும், விஷயம் அறிந்த ஏட்டு, வேப்பம்பட்டு சாலையில் மகளை காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பினார்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து முகம் வெந்துபோய்.. கருகி கொண்டிருந்த தீபிகா மற்றும் வீட்டில் இருந்த பாக்கியலட்சுமி, திவ்யா ஆகியோரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.. அங்கு இவர்களுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories