கணவரின் உடலை அடக்கம் செய்ய வராத உறவினர்கள்! வருந்திய மனைவிக்கு உதவிய உள்ளங்கள்!

dead body 1 - 2026

மதுரையில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் சீல் வைக்கப்பட்ட பகுதியில் உடல் நல குறைவால் இறந்த முதியவரின் உடலை தன்னார்வலர்கள் அடக்கம் செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா என்ற ஒற்றை வார்த்தையால் முடங்கி கிடக்கிறது. உறவினர்களின் துன்பங்களுக்கு கூட ஆறுதல் அளிக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இயற்கையாக இறப்பவர்களுக்கு கூட உறவினர்கள் கூடி இறுதி சடங்குகள் செய்ய முடிவதில்லை. இந்த கொடுமை தற்போது மதுரையை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு நேர்ந்துள்ளது.

கொரோனா காரணமாக மதுரை செல்லூர் பகுதியின் ஒரு சில தெருக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் உடல் நல குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இறந்தவரின் மனைவி வேண்டுகோளின்படி முதியவரின் உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்ல மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தார். அதன்பிறகு ஆம்புலன்ஸின் மூலம் அவரது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் கொரோனா அச்சத்தால் உறவினர்கள் யாரும் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முன் வரவில்லை.

இதனால் இறந்தவரின் மனைவி மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இதனைப்பற்றி கேள்விப்பட்ட அந்த பகுதியை சேர்ந்த சில தன்னார்வலர்கள் இறந்தவரின் உடலை அருகில் இருந்த சுடுகாட்டிற்கு எடுத்து சென்று புதைத்துள்ளனர். தன்னார்வளர்களின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories