பச்சை ஆரஞ்சுக்கு மாறியது… ஆரஞ்சு பச்சைக்கு மாறியது..! கிருஷ்ணகிரியும் நீலகிரியும்!

red orange green zone
red orange green zone

தமிழகத்தில் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 67 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அது ஆரஞ்சுக்கு மாறியது. அதே நேரம், ஆரஞ்சு மண்டலமாக இருந்த நீலகிரி, கடந்த 21 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாததால் பச்சை மண்டலமாக மாறியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனினும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்ததால், தமிழகத்திலேயே கிருஷ்ணகிரி மட்டுமே பச்சை மண்டலத்தில் இருந்தது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வேப்பனஹள்ளி அருகேயுள்ள நல்லூரைச் சேர்ந்த 67 வயது நபருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பச்சை மண்டலத்தில் இருந்த கிருஷ்ணகிரி, ஆரஞ்ச் மண்டலத்திற்கு மாறியுள்ளது.

கிருஷ்ணகிரியின் நல்லூர் கிராமத்தை சேர்ந்த 67 வயது நிரம்பிய முதியவர் ஒருவர் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்குச் சென்று, சுவாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பியுள்ளார். அவருடன் 3 பேர் சென்றுள்ளனர். வந்த இடத்தில் அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

tamilnadu may 1st
tamilnadu may 1st

இதனால் அவருடன் சென்ற 3 பேர் மற்றும் அவரின் உறவினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதேபோன்று கொரோனா பாதித்த நபரின் நல்லூர் கிராமத்திற்கும் ‘சீல்’ வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஊருக்கு உள்ளே செல்வதற்கோ அல்லது ஊரில் இருந்து வெளியே போவதற்கோ தடை விதிக்கப்படுகிறது.

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மேலும், கடந்த 21 நாட்களாக அந்த மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று இல்லாததால் நீலகிரி மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Entertainment News

Popular Categories