December 6, 2025, 4:54 AM
24.9 C
Chennai

கொரோனா: கால் விரல்கள் சிவந்து வீங்குதல் ஒரு அறிகுறியா?

leg finger 1

கால் விரல்கள் சிவந்து காணப்படுவதும் கொரோனாவுக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த தோல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கை அல்லது கால் விரல்களின் சருமம் சற்று சிவந்து அல்லது வீங்கி அல்லது இரண்டுமே இருந்து வலி ஏற்படுவதும் கொரோனாவுக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

பெரும்பாலும், கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லாத சிறுவர்கள், இளம் வயதினர் மற்றும் நடுத்தர வயதினருக்கு இந்த அறிகுறி மட்டும் தென்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில், இருமல், காய்ச்சல், தலைவலி மட்டுமே கொரோனாவுக்கான அறிகுறிகளாக சொல்லப்பட்டு வந்த நிலையில், முகரும், ருசி அறியும் திறனை இழத்தல், வயிற்றுப் போக்கு, குளிர் மற்றும் குளிருடன் நடுக்கம் போன்றவையும் கொரோனாவுக்கான அறிகுறிகளாகக் கண்டறியப்பட்டன. இதில் தற்போது புதிதாக இணைகிறது கால்விரல் வீக்கம்.

ஆனால், இது ஒரு நல்ல அறிகுறி என்றும் சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது, உடலுக்குள் வந்த கொரோனா கிருமியை எதிர்த்து நமது நோய் எதிர்ப்பு சக்தி போராடுவதையே இந்த அறிகுறி காட்டுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

அமெரிக்காவின் சுகாதாரத் துறை அதிகாரிகள், கால் விரல்கள் சிவப்பதை கரோனாவுக்கான அறிகுறிகளின் பட்டியலில் இன்னமும் சேர்க்கவில்லை. அந்த மாற்றத்தை ஏற்படுத்த தோல் மருத்துவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

அப்படி இணைக்கப்பட்டால்தான் கால்விரல்கள் சிவந்து இருப்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடியும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

ஒரு வேளை யாருக்காவது கால் விரல்கள் சிவந்து காணப்பட்டால் உடனடியாக உங்கள் குடும்ப நல மருத்துவரை அல்லது தோல் மருத்துவரை நாடி ஆலோசனை பெறுங்கள். உடனடியாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்குச் சென்று விடாதீர்கள், அங்கு உங்களுக்கு கொரோனா பரவலாம் அல்லது, நீங்கள் யாருக்காவது கொரோனாவைப் பரப்பலாம் என்றும் எச்சரிக்கிறார்கள்.

முன்பெல்லாம் ஒரு சிலர்தான் கால் சிவத்தல் பிரச்னையோடு வருவார்கள். ஆனால் இப்போது ஒரு நாளைக்கு 10க்கும் மேற்பட்டவர்கள் இந்த பிரச்னையோடு மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதே சமயம், கால் விரல்கள் சிவத்தல் போன்ற பிரச்னைகள், நீங்கள் விரைவில் குணமடையப் போகிறீர்கள் என்பதையே காட்டுவதாகவும், அதற்காக யாரும் அச்சமடைய வேண்டாம் என்றும், ஒரு வேளை முழு உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கும், அதிகப்படியான குளிர்ச்சி போன்ற காரணங்களாலும் இந்த கால்விரல் சிவத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலில் கால் விரல்கள் வீங்கலாம், பிறகு அது சிவந்து வலியை ஏற்படுத்தும். சில சமயம் வீங்கும் விரல் மட்டும் சற்று நீல நிறமாகவும் மாறலாம் என்றும் மருத்துவர்கள் விளக்குகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories