December 5, 2025, 3:38 PM
27.9 C
Chennai

கோயில்கள் மூடலால்… வாழ்வை இழந்து கண்ணீர் வடிக்கும் ‘மூன்று பிரிவினர்’!

madurai sevuka perumal temple - 2025
மதுரை அண்ணாநகர் ஆலமரம் சேவுகப் பெருமாள் அய்யனார் திருக்கோயில்.

கோயில்களை எப்போது திறப்பார்கள் என்று ஒவ்வொரு நாளும் ஏக்கத்துடன் தங்கள் அடி வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டே, கண்ணீரில் தவித்து வருகிறார்கள் மூன்று பிரிவினர்.

தமிழகத்தில் கோயில் மூடப்பட்டுள்ளதால் மூன்று வகையான தொழில்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து, மன பாரத்துடன் பொருமித் தள்ளுகின்றனர்.

வெறிச்சோடிய பூக்கடை வியாபாரம்
வெறிச்சோடிய பூக்கடை வியாபாரம்

தமிழகத்தில் ஊரடங்கால் தொடர்ந்து கோயில்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பக்தர்கள், ஒவ்வொரு நாளும் கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்து விட்டு பிறகே உணவு உட்கொள்ளும் விரதம் போன்ற பழக்கத்துக்கு ஆட்பட்டவர்கள், இப்போது இறைவனை தரிசிக்க முடியாமல் மனம் நொடிந்து போயுள்ளனர்.

தமிழக அரசு நான்காவது முறையாக ஊரடங்கை நீடித்ததுடன், ஆலயங்கள், மத வழிபாட்டுத் தலங்களை தொடர்ந்து மூடி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் கோயில் ஊழியர்கள் தவிர புஷ்ப வியாபாரிகள், அபிஷேக பொருட்கள், வாசனை திரவிய உற்பத்தியாளர்கள், இளநீர் கடை வியாபாரிகள் என பல்வேறு தரப்பும் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது.

மதுரையில் தனியார் ஆலயத்தில் பணியாற்றும் பூஜகர் எம்.ஜி.பிரபு கூறியது.மதுரையில் தனியார் ஆலயத்தில் பணியாற்றும் பூஜகர் எம்.ஜி.பிரபு
மதுரையில் தனியார் ஆலயத்தில் பணியாற்றும் பூஜகர் எம்.ஜி.பிரபு கூறியது.மதுரையில் தனியார் ஆலயத்தில் பணியாற்றும் பூஜகர் எம்.ஜி.பிரபு

கோயில் வாசல்களில் பூக்களை விற்பணை செய்வோர், பல மாதங்களாக ஆலயங்கள் பூட்டப்பட்டுள்ளதால், தெருக்களுக்கு வந்து பூக்களை கூவி விற்பனை செய்யும் நிலைக்கு வந்து விட்டனர். ஆயினும் எதிர்பார்த்த வியாபாரம் இல்லாததால் பெரும் மனக்கசப்பில் உள்ளனர். இதனால் சிலர், வீட்டு அருகே தாற்காலிக காய்கறிகளை வைத்து பிழைப்பை நடத்துகின்றனர்.

இது குறித்து கோயிலில் பூ வியாபாரம் செய்யும் கோவிந்த் கூறியபோது… ஆலயங்கள் தொடர்ந்து அடைக்கப் பட்டுள்ளதால், கோயில்களை விட்டு வெளியே சாலைகளில் பூக்களை விற்று வருகிறோம். பல நாட்கள் விற்பனை ஆகாத பூக்களை குப்பையில் கொட்டுகின்ற நிலையும் உள்ளது என்றார்.

மதுரை அண்ணாநகரில் அடைக்கப்பட்டுள்ள சேவுக பெருமாள், வேங்கடாசலபதி கோயில்.
மதுரை அண்ணாநகரில் அடைக்கப்பட்டுள்ள சேவுக பெருமாள், வேங்கடாசலபதி கோயில்.

மதுரை மேலமடையைச் சேர்ந்த தனியார் ஆலய அர்ச்சகர் பிரபு கூறியபோது” பல தனியார் ஆலயங்களில் கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை! மதுரை புறநகர் பகுதிகளில் உள்ள கோயில்களை பராமரிப்போர்கள், கோயில் பூஜகர்களிடமும், இதர பணியாளர்களிடமும், நீங்கள் கொரோனா முடிந்த பிறகு பணிக்கு வாங்க, இப்போதைக்கு சம்பளம் வழங்க இயலாது என தெரிவிக்கின்றனர்… என்றார்.

எனவே, தமிழக அரசு, கொரோனா தாக்கம் இல்லாத பகுதிகளில் உள்ள ஆலயங்களில் சமூக இடைவெளியூடன் அனுமதித்து, கட்டாயம் மாஸ்க் அணிந்து வரச் சொல்லி, குறைவான எண்ணிக்கையில் பக்தர்களை உள்ளே அனுப்பி, இறை தரிசன அனுமதியை தொடங்க வேண்டும் என்பதே பக்தர்கள் பேரவையின் கோரிக்கை! அரசு இதற்கு செவி சாய்க்குமா?!

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories