December 6, 2025, 4:24 AM
24.9 C
Chennai

வெளிநடப்பு செய்த ஆளும் கட்சி உறுப்பினர்: சட்டமன்ற வரலாற்றில் விநோதம்

thangatamilselvan admk - 2025

சென்னை:
தமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்த விநோதமாக, ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவரே வெளிநடப்பு செய்தார்.
தமிழக சட்டசபையிலிருந்து அதிமுக எம்எல்ஏ தங்கதமிழ்ச் செல்வன் வெளிநடப்பு செய்து சட்டசபை வரலாற்றில் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் முதல்முறையாக வெளிநடப்பு செய்தார் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த, 14ஆம் தேதி சட்டமன்றம் கூடியது. முதல் நாளிலேயே, அரசைத் தக்க வைப்பதற்காக, கூவத்தூரில் எம்.எல்.ஏக்களைக் கடத்தி வைத்து, பேரம் நடத்தியது குறித்த விவகாரத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பின. சபாநாயகர் தனபால் அதற்கு அனுமதிக்கவில்லை. அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றார். இந்த விவகாரத்தால் அமளியில் ஈடுபட்ட திமுகவும், அதற்கு கண்டனம் தெரிவித்து கூட்டணி கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.
இந்நிலையில் உயர் கல்வி, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கை சட்டசபையில் இன்று காலை பேரவைக் கூடியதும் நடைபெற்றது.
சுகாதாரத் துறை குறித்து கேள்வி எழுப்ப அனுமதி வழங்குமாறு தினகரன் ஆதரவாளரும், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ-வுமான தங்க.தமிழ்ச்செல்வன் கேட்டார். ஆனால், அதனை சபாநாயகர் மறுக்கவே, தங்க. தமிழ்ச்செல்வன் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். இதனைப் பார்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சியில் உறைந்தார். சட்டசபை வரலாற்றிலேயே ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் வெளிநடப்பு செய்வது இதுதான் முதல்முறை.
உள்கட்சிப் பிரச்னை தலைதூக்கியுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடியை அவமானப் படுத்தும் நோக்கில், தினகரன் ஆதரவு ஆளும் கட்சி எம்.எல்.ஏ., வெளிநடப்பு செய்து, சட்டப் பேரவை வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories