April 19, 2025, 5:01 AM
29.2 C
Chennai

கொரோனா: அரசு மருத்துவமனையிலேயே தூக்கிட்டு முதியவர் தற்கொலை!

thiruvallur gh
thiruvallur gh

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொரானா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 67 வயது முதியவர் ஒருவர், மருத்துவமனைக்கு உள்ளேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த மேல்மனம் பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். வயது 67. இவரது மனைவி தொழிலாளர் நல வாரியத்தில் அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர். வரதராஜன் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவி செய்து வந்ததாராம்.

coronaward
coronaward

இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வரதராஜன் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து அங்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அங்கிருந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பிரிவுக்கு 7ஆம் தேதி மாற்றப்பட்டார்.

அங்கே சிகிச்சை பெற்று வந்த அவர் தனது குடும்பத்தார் உறவினர் எவரும் தன்னைப் பார்க்க வராமல் புறக்கணித்து விட்டனர் என்று கூறி, மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டுமான பணி நடைபெறும் இடத்துக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பிணவறைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் திருத் தேரோட்டம் கோலாகலம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

Topics

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

Entertainment News

Popular Categories