குடும்பப் பிரச்னையில் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்துக் கொன்ற கணவன்

Published:

பண்ருட்டி: குடும்பப் பிரச்னை காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்றார் கணவர். இந்தச் சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டி வட்டம் பணப்பாக்கம் காலனியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி வீரமணி. இவருக்கும், உமா (28) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், இரண்டரை வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவதுண்டாம். இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் குடும்பப் பிரச்னை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரத்தில் வீரமணி, தன் கையில் வைத்திருந்த பிளேடால் மனைவி உமாவின் கழுத்தை அறுத்தார். ரத்தம் அதிகம் வெளியேறியதால், உமா துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று முதல் கட்ட விசாரணையைத் துவக்கினர். மேலும், உமாவின் உடலைக் கைப்பற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img