திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் இருவர் பலியாயினர். 3 பேர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல் – நத்தம் சாலையில் வீட்டுக்கு வெளியே சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது குடோனுக்கு சரக்கு ஏற்றும் லாரி ஒன்றை ரிவர்ஸில் எடுத்துள்ளனர். அந்நேரம், வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த பழனியம்மா, ஆரோக்கியசாமி உட்பட 5 பேர் மீது லாரி ஏறியது. இதில் பழனியம்மா, ஆரோக்கியசாமி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற மூவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனே திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். லாரியை பின்புறமாக ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார்.
திண்டுக்கல்: வீட்டின் வெளியே தூங்கியவர்கள் மீது லாரி மோதி இருவர் பலி
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

