ஆர்.கே.நகரில் சுயேட்சைகளின் ஆதிக்கம்! 131 பேர் மனுத் தாக்கலின் மர்மம் என்ன?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 131 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு செய்வதற்கான கடைசி நாளான நேற்று மட்டும் 101 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த நாளில் பாஜக., வேட்பாளர் கரு.நாகராஜன், விஷால், தீபா ஆகியோர் முக்கியமானவர்கள்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் டிச.21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கிய நிலையில், திமுக, அதிமுக, பா.ஜ.க., மற்றும் சுயேட்சைகள் தினகரன், விஷால், தீபா உள்ளிட்ட 131 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். சுயேட்சையாக போட்டியிடும் அவர், வேட்புமனுவில் தன்னிடம் ரூ.1.06 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெ., அண்ணன் மகள் தீபா வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவில் சொத்து விவரங்கள், நகைகள் மற்றும் விவசாய நிலங்கள் குறித்த எந்த தகவலையும் தீபா குறிப்பிடவில்லை.

தேர்தல் தொடர்பாக டிச.6 முதல் பொது மக்கள், பொதுப் பார்வையாளரிடம் புகார் கூறலாம் என தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய சுயேட்சைகள் மனுத்தாக்கலில் கண்ட சுவாரஸ்யம், மனுத்தாக்கல் செய்தவர்களில் அதிகம் பேருடைய பெயர்கள் தினகரன், தீபா, விஷால் என்று இருந்ததுதான்!

வாக்காளர்களை விட வேட்பாளர்கள் அதிகம் பேர் ஆகிவிடுவார்கள் போல் உள்ளதே என்று பலரும் அங்கே காதைக் கடித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories