இந்தியாவின் உதவியில் ஈரானில் அமைந்த துறைமுகம்: பயன்பாட்டுக்கு வந்தது!

புதுதில்லி :

இந்தியாவின் நிதி உதவியுடன் ஈரானில் கட்டப்பட்டுள்ள சபாஹர் துறைமுகம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வணிகம் பெரும்பாலும் பாகிஸ்தான் வழியாகவே மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல பாகிஸ்தான் முரண்டு பிடித்தது. மேலும் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தானின் கவாடர் துறைமுகம் அமைக்கும் பணியையும் துவக்கியது.

chbhagar - 2026
ஈரானில் இந்திய நிதி உதவியில் அமைந்த சபாஹர் துறைமுகத்தால், இனி பொருள்களை பாகிஸ்தான் நிலப்பகுதியை தவிர்த்து ஈரான் வழியாகக் கொண்டு செல்ல முடியும்…

இதனால், இந்தியாவுக்கு மாற்று வழி தேவைப்பட்ட நிலையில், ஈரானில் ஓமன் வளைகுடா பகுதியில் அரபிக் கடலை ஒட்டியுள்ள சபாஹர் பகுதியில் துறைமுகம் அமைக்கும் பணியை இந்தியா துவக்கியது. இதற்காக ரூ. 3,300 கோடி நிதி உதவி அளித்தது. அதில் ரூ.2,200 கோடி ரூபாய் செலவிலான சபாஹர் துறைமுகத்தின் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்தன. அதனை ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி நேற்று துவக்கி வைத்தார். இதன் மூலம் 25 லட்சம் டன்னாக இருந்த இந்தத் துறைமுகத்தின் கையாளும் திறன் 85 லட்சம் டன்னாக உயருகிறது.

இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் கீழ் புதிதாக ஐந்து கப்பல் தளங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியப் பெருங்கடல் வழியாக ஆசிய நாடுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கான தொலைவு வெகுவாகக் குறைந்துள்ளது.

iran chabahar port - 2026
ஈரானில் இந்திய நிதி உதவியில் அமைந்த சபாஹர் துறைமுக திறப்பு விழாவில்…

ரஷ்யாவில் இருந்து திரும்பும் வழியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று முன்தினம் தெஹ்ரான் சென்றார். அந்நாட்டு அதிபருடன் ஆலோசனை நடத்தினார். நேற்று நடந்த துறைமுக துவக்க விழாவில் இந்தியா, கத்தார், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories