December 6, 2025, 1:50 AM
26 C
Chennai

இந்தியாவின் உதவியில் ஈரானில் அமைந்த துறைமுகம்: பயன்பாட்டுக்கு வந்தது!

புதுதில்லி :

இந்தியாவின் நிதி உதவியுடன் ஈரானில் கட்டப்பட்டுள்ள சபாஹர் துறைமுகம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வணிகம் பெரும்பாலும் பாகிஸ்தான் வழியாகவே மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல பாகிஸ்தான் முரண்டு பிடித்தது. மேலும் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தானின் கவாடர் துறைமுகம் அமைக்கும் பணியையும் துவக்கியது.

chbhagar - 2025
ஈரானில் இந்திய நிதி உதவியில் அமைந்த சபாஹர் துறைமுகத்தால், இனி பொருள்களை பாகிஸ்தான் நிலப்பகுதியை தவிர்த்து ஈரான் வழியாகக் கொண்டு செல்ல முடியும்…

இதனால், இந்தியாவுக்கு மாற்று வழி தேவைப்பட்ட நிலையில், ஈரானில் ஓமன் வளைகுடா பகுதியில் அரபிக் கடலை ஒட்டியுள்ள சபாஹர் பகுதியில் துறைமுகம் அமைக்கும் பணியை இந்தியா துவக்கியது. இதற்காக ரூ. 3,300 கோடி நிதி உதவி அளித்தது. அதில் ரூ.2,200 கோடி ரூபாய் செலவிலான சபாஹர் துறைமுகத்தின் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்தன. அதனை ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி நேற்று துவக்கி வைத்தார். இதன் மூலம் 25 லட்சம் டன்னாக இருந்த இந்தத் துறைமுகத்தின் கையாளும் திறன் 85 லட்சம் டன்னாக உயருகிறது.

இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் கீழ் புதிதாக ஐந்து கப்பல் தளங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியப் பெருங்கடல் வழியாக ஆசிய நாடுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கான தொலைவு வெகுவாகக் குறைந்துள்ளது.

iran chabahar port - 2025
ஈரானில் இந்திய நிதி உதவியில் அமைந்த சபாஹர் துறைமுக திறப்பு விழாவில்…

ரஷ்யாவில் இருந்து திரும்பும் வழியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று முன்தினம் தெஹ்ரான் சென்றார். அந்நாட்டு அதிபருடன் ஆலோசனை நடத்தினார். நேற்று நடந்த துறைமுக துவக்க விழாவில் இந்தியா, கத்தார், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories