December 6, 2025, 12:14 AM
26 C
Chennai

தோழியைப் பிரிய மனமில்லாமல் 4வது மாடியில் இருந்து குதித்து மாணவி மரணம்!

சேலம்: சேலம் மாவட்டம் அரிசிப்பாளையத்தை சேர்ந்தவர்கள் ஜெயராணி, கவிதாஸ்ரீ. இவர்கள் தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தனர். இவர்களை நேற்று மாலை முதல் காணவில்லை என்று பெற்றோர், பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று 4 மாடிக் கட்டடத்தில் இருந்து இருவரும் குதித்தனர். இதில் ஜெயராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவிதாஸ்ரீ படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலத்தில் பள்ளி மாணவிகள் இருவர் தங்கும் விடுதியின் 4வது மாடியில் இருந்து குதித்ததில் ஒரு மாணவி உயிரிழந்தார். மற்றொரு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் சின்னகடை வீதியில் ஸ்ரீ சரவண பவன் உணவகம் மற்றும் தங்கும் விடுதி உள்ளது. தற்போது அந்த தங்கும் விடுதி பயன்பாட்டில் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை அந்தத் தங்கும் விடுதியின் நான்காவது மாடியில் மாணவிகள் இருவர் நின்று கொண்டிருந்ததைக் கண்ட அருகிலிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் மாணவிகளை கீழே இறங்குமாறு கூச்சலிட்டனர். ஆனால் அந்த இரு மாணவிகளும் தீடிரென கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்தனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்றொரு மாணவியை அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டு, சேலம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்த போலீசார், நடத்திய விசாரணையில் உயிரிழந்த மாணவியின் பெயர் ஜெயராணி என்பதும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் சங்கர் நகரைச் சேர்ந்த கவிதாஸ்ரீ என்றும் தெரியவந்தது. இருவரும் சேலம் நான்குரோடு பகுதியில் உள்ள செயிண்ட் மேரீஸ் பள்ளியில் படித்து வந்ததும், இருவரும் ஏற்கனவே ஒரு முறை தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

உயிரிழந்த மாணவி ஜெயராணியின் தாயார் இரு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதனால் மன உளைச்சலோடு காணப்பட்ட ஜெயஸ்ரீ, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து அதனை கவிதாஸ்ரீயிடம் கூறியுள்ளார். தோழியை பிரிய மனமில்லாத கவிதாஸ்ரீ தனும் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி, தங்கும் விடுதியில் மேல் மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இருவரும் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்களில் ஜெயராணி உயிரிழந்துள்ளார். கவிஸ்ரீதாக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories