தென்காசியில் பரபரப்பு! பஜார் பள்ளிவாசலில் உயர்நீதிமன்ற குழு ஆய்வு!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் அருகே உள்ள பஜார் பள்ளிவாசலில் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
நெல்லை மாவட்டம் தென்காசியில் பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே உள்ள அம்மன் சன்னதியில் அமைந்துள்ள பஜார் பள்ளிவாசல் கட்டிடம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டு உள்ளது.
இந்த நிலத்தில் உள்ள கடைகள் இஸ்லாமிய வியாபாரிகள் வசம் சென்றதாகவும், இதனால் அவர்கள் அங்கு பஜார் பள்ளிவாசல் நிறுவி தொழுகை நடத்தி வந்தாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், இப்பள்ளிவாசலின் மேற்கூரை சேதமடைந்திருப்பதாகவும் அதை பராமரிக்கவும் அனுமதி கோரி கடந்த 2014ஆம்ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காஜாமைதீன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் அந்த நிலம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்றும் அந்த நிலத்தில் புதியதாக கடைகள், பள்ளிவாசல் நிறுவ தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடைபெற்ற நிலையில் புதிய பள்ளிவாசல், கடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டது.
இதே போல அந்த நிலம் இஸ்லாமிய வியாபாரிகளுக்கு சொந்தமானது ஆகவே  தடையை நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த தடையை நீக்குவது சமம்பந்தமாக வழக்கு மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது. அதில் எதிர் தரப்பினர் பள்ளிவாசல் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளதால் அதனை கட்டுவதற்கு அனுமதி அளிக்க கூடாது என வாதிட்டார்.
எனவேஅதன் உண்மை நிலையினை அறிய மதுரை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கறிஞர்கள் நிரஞ்சன், ராகவகோபாலன், இந்து அமைப்பின் சார்பில் கார்திக், இஸ்லாமிய அமைப்பு சார்பில் ஹாஜா முஹைதீன். நகராட்சி சார்பில் அதிவீரபாண்டியன், இந்து அறநிலைதுறை சார்பில் ராஜா,மற்றும் நில அளவை யாளர்கள் அடங்கிய குழுவினர் இன்று தென்காசி வந்தனர்.
அவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் கோவில் இடத்தில் அமைந்துள்ளதா? என்று ஆய்வு மேற்க்கொண்டனர். இந்த ஆய்வுகளை மதுரை உயர்நீதி மன்றத்தில் அறிக்கையாக அவர்கள் சமர்பிக்க உள்ளனர்.
இதன் காரணமாக நகரில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க காலை முதல் மாலை வரை தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் பகுதியில் உள்ள கடை வீதிகளில் டி.எஸ்.பி.,மணிகண்டன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், பாலமுருகன் மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories