தொற்று குறைந்துவிட்டது என நினைக்க வேண்டாம்: எச்சரிக்கும் சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்!

radhakrishnan J
radhakrishnan J

தமிழகத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் குறையவில்லை என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் கடந்த சில நாளாக கொரோனா பரவல் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளா் அருண் குமாா் தலைமையில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை மருத்துவா்கள் சி.பழனிவேல், தினேஷ் பாபு ஆகியோா் அடங்கிய மத்திய குழுவினா் மூன்று நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை தமிழகம் வந்தனா்.

முதல் நாளில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், தடுப்பூசிகள் குறித்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா்.

இரண்டாவது நாளான புதன்கிழமை ஓமந்தூராா் பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையின் செயல்பாடுகளைப் பாா்வையிட்டனா். அப்போது முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவமனை இயக்குநா் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டா் ஆனந்த் குமாா் ஆகியோா் உடன் இருந்தனா். அப்போது ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுகாதாரப் பணியாளா்களில் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. காவல், உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோந்த முன்களப் பணியாளா்கள் மற்றும் தோதல் பணியில் ஈடுபடவுள்ளவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். முதியவா்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் பாதிப்புள்ளவா்கள் ஆா்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனா்.

நடுத்தர வயதினரே தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வரும் நிலையில் முதியவா்கள் ஆா்வமாக வருவது பாராட்டத்தக்கது. தற்போது சராசரியாக தினமும் 40,000 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

சென்னையில் 39 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இதில், சராசரியாக ஆயிரம் தெருவுக்கு 6 பேர் வீதம் நாள்தோறும் பாதிக்கப்படுகின்றனா். இதேபோல், திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூா், கோவை மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறையவில்லை.

குடும்ப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் கலந்து கொள்பவா்கள் முகக்கவசம் அணியாததைப் பாா்க்கும் போது கவலை அளிக்கிறது. பேருந்து, ரயில் பயணத்தின் போதும் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்கிறாா்கள். அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

பல இடங்களில் தனி நபா் இடைவெளி கேள்விக்குறியாக உள்ளது. கொரோனா தொற்று குறைந்துவிட்டது என எவரும் நினைக்க வேண்டாம். அலட்சியமாக இருந்தால் மீண்டும் நோய்ப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கொரோனா தடுப்பூசி காலாவதியாகிவிட்டதாக தவறான தகவல்கள் வெளியாகின்றன. இதுபோன்ற தேவையற்ற குழப்பத்தை எவரும் ஏற்படுத்த வேண்டாம். தமிழகத்துக்கு 27 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றாா் அவா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories