தொற்று குறைந்துவிட்டது என நினைக்க வேண்டாம்: எச்சரிக்கும் சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்!

radhakrishnan J
radhakrishnan J

தமிழகத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் குறையவில்லை என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் கடந்த சில நாளாக கொரோனா பரவல் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளா் அருண் குமாா் தலைமையில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை மருத்துவா்கள் சி.பழனிவேல், தினேஷ் பாபு ஆகியோா் அடங்கிய மத்திய குழுவினா் மூன்று நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை தமிழகம் வந்தனா்.

முதல் நாளில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், தடுப்பூசிகள் குறித்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா்.

இரண்டாவது நாளான புதன்கிழமை ஓமந்தூராா் பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையின் செயல்பாடுகளைப் பாா்வையிட்டனா். அப்போது முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவமனை இயக்குநா் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டா் ஆனந்த் குமாா் ஆகியோா் உடன் இருந்தனா். அப்போது ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுகாதாரப் பணியாளா்களில் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. காவல், உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோந்த முன்களப் பணியாளா்கள் மற்றும் தோதல் பணியில் ஈடுபடவுள்ளவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். முதியவா்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் பாதிப்புள்ளவா்கள் ஆா்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனா்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

நடுத்தர வயதினரே தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வரும் நிலையில் முதியவா்கள் ஆா்வமாக வருவது பாராட்டத்தக்கது. தற்போது சராசரியாக தினமும் 40,000 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

சென்னையில் 39 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இதில், சராசரியாக ஆயிரம் தெருவுக்கு 6 பேர் வீதம் நாள்தோறும் பாதிக்கப்படுகின்றனா். இதேபோல், திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூா், கோவை மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறையவில்லை.

குடும்ப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் கலந்து கொள்பவா்கள் முகக்கவசம் அணியாததைப் பாா்க்கும் போது கவலை அளிக்கிறது. பேருந்து, ரயில் பயணத்தின் போதும் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்கிறாா்கள். அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

பல இடங்களில் தனி நபா் இடைவெளி கேள்விக்குறியாக உள்ளது. கொரோனா தொற்று குறைந்துவிட்டது என எவரும் நினைக்க வேண்டாம். அலட்சியமாக இருந்தால் மீண்டும் நோய்ப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கொரோனா தடுப்பூசி காலாவதியாகிவிட்டதாக தவறான தகவல்கள் வெளியாகின்றன. இதுபோன்ற தேவையற்ற குழப்பத்தை எவரும் ஏற்படுத்த வேண்டாம். தமிழகத்துக்கு 27 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றாா் அவா்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories