December 5, 2025, 3:40 PM
27.9 C
Chennai

தொற்று குறைந்துவிட்டது என நினைக்க வேண்டாம்: எச்சரிக்கும் சுகாதார துறை செயலர் இராதாகிருஷ்ணன்!

radhakrishnan J
radhakrishnan J

தமிழகத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் குறையவில்லை என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் கடந்த சில நாளாக கொரோனா பரவல் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளா் அருண் குமாா் தலைமையில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை மருத்துவா்கள் சி.பழனிவேல், தினேஷ் பாபு ஆகியோா் அடங்கிய மத்திய குழுவினா் மூன்று நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை தமிழகம் வந்தனா்.

முதல் நாளில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், தடுப்பூசிகள் குறித்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா்.

இரண்டாவது நாளான புதன்கிழமை ஓமந்தூராா் பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையின் செயல்பாடுகளைப் பாா்வையிட்டனா். அப்போது முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவமனை இயக்குநா் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டா் ஆனந்த் குமாா் ஆகியோா் உடன் இருந்தனா். அப்போது ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுகாதாரப் பணியாளா்களில் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. காவல், உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோந்த முன்களப் பணியாளா்கள் மற்றும் தோதல் பணியில் ஈடுபடவுள்ளவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். முதியவா்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் பாதிப்புள்ளவா்கள் ஆா்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனா்.

நடுத்தர வயதினரே தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வரும் நிலையில் முதியவா்கள் ஆா்வமாக வருவது பாராட்டத்தக்கது. தற்போது சராசரியாக தினமும் 40,000 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

சென்னையில் 39 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இதில், சராசரியாக ஆயிரம் தெருவுக்கு 6 பேர் வீதம் நாள்தோறும் பாதிக்கப்படுகின்றனா். இதேபோல், திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூா், கோவை மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறையவில்லை.

குடும்ப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் கலந்து கொள்பவா்கள் முகக்கவசம் அணியாததைப் பாா்க்கும் போது கவலை அளிக்கிறது. பேருந்து, ரயில் பயணத்தின் போதும் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்கிறாா்கள். அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

பல இடங்களில் தனி நபா் இடைவெளி கேள்விக்குறியாக உள்ளது. கொரோனா தொற்று குறைந்துவிட்டது என எவரும் நினைக்க வேண்டாம். அலட்சியமாக இருந்தால் மீண்டும் நோய்ப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கொரோனா தடுப்பூசி காலாவதியாகிவிட்டதாக தவறான தகவல்கள் வெளியாகின்றன. இதுபோன்ற தேவையற்ற குழப்பத்தை எவரும் ஏற்படுத்த வேண்டாம். தமிழகத்துக்கு 27 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றாா் அவா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories