இரீடியம் விற்பனை மோசடி: ஜெயசித்ரா மகன் கைது!

ambrish - 2026

இரிடியம் விற்பனை செய்வதாக கூறி ₹26.20 கோடி மோசடி செய்த நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்பரீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, சிவக்குமார் என பலருடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜெயசித்ரா. இவர் புதுப்புது அர்த்தங்கள், மாமன் மகள் போன்ற 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் கணேஷ். இவரது மகன் தான் பிரபல இசை அமைப்பாளர் அம்ரீஷ். ஜெயசித்ராவின் கணவர் சமீபத்தில் இறந்துவிட, அவர் தனது மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

ambrish1 - 2026

இந்நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான அம்ரீஷ் இரிடியம் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை ஜெயசித்ரா இயக்கிய நானே என்னுள் இல்லை படத்தில் நடித்த போது சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த நெடுமாறன் என்ற தொழில் அதிபருக்கும் அம்ரீஷுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ambrish2 - 2026

நெடுமாறனிடம் , அம்ரீஷ் மற்றும் அவரது நண்பர்கள் ‘அரியவகை ‘இரிடியம்’ இருக்கிறது. இதற்கு கனடா ஆய்வகம் சான்று அளித்துள்ளது என்று கூறியுள்ளனர். இதை நம்பிய நெடுமாறனை மலேசியாவுக்கு அழைத்து சென்று மலேஷிய நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

அதன்படி மலேசிய நிறுவனம் பெருமளவு கொடுக்கும் தொகையை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு 26.20 கோடி கொடுத்தால் போதும் என அம்ரீஷ் கூறியுள்ளார். கோடிக்கணக்கில் பணம் வர போகிறது என எண்ணிய தொழிலதிபர் நெடுமாறன் அம்ரீஷ் மற்றும் இவரது நண்பர்களிடம், ரூ.26.20 கோடி கொடுத்துள்ளார்.

jeyachithra - 2026

ஆனால் மலேசிய நிறுவனத்திடமிருந்து எந்த பணமும் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் நெடுமாறன்.

இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அம்ரீஷை கைது செய்தனர்; விசாரணையில் 26.20 கோடி ரூபாயை மோசடி செய்ததை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து, அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories